tamilnadu

img

சிறுபான்மையின மாணவர் கல்வி உதவித் தொகையை ரத்து செய்திடும் ஆணையைத் திரும்பப் பெறுக!

புதுதில்லி, டிச.3- சிறுபான்மையின மாணவர்களுக்கு அளிக்  கப்பட்டுவந்த கல்வி உதவித் தொகை  ஒன்றிய அரசாங்கம் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. இந்த  உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அம்மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வி உத வித் தொகை வழங்கிட வேண்டும் என்றும் வலி யுறுத்தி ஒன்றிய அரசுக்கு  மாநில சிறுபான்மை  ஆணையத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அல் போன்ஸ் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர், ஒன்றிய சிறு பான்மை நலத்துறை  அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு  அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு வரை படித்துவந்த சிறு பான்மை இன மாணவர்களுக்கு ஒன்றிய அர சாங்கம் 2006இலிருந்து கல்வி உதவித் தொகை  (ஸ்காலர்ஷிப்) வழங்கி வந்தது. விளிம்புநிலை யில் உள்ள பல லட்சக்கணக்கான சிறுபான்மை யின மாணவர்கள் இதனால் பயனடைந்து வந்த னர். இந்தத் திட்டம் கடந்த 16 ஆண்டுகளாக மிக வும் வெற்றிகரமாக நடந்து வந்தது.

ஆயினும் ஒன்றிய அரசாங்கம், கல்வி யாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காது, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்  களுக்கு அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை திடீரென்று ரத்து செய்திருக்கி றது. இவ்வாறு அரசாங்கம் ரத்து செய்ததற் காகக் கூறப்படும் காரணம் ஏற்கக்கூடியதல்ல. 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் இல வசக் கல்வி அறிமுகப்படுத்தப் பட்டிருப்ப தால், இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தேவையில்லை என்று கூறி, அளித்து வந்த கல்வி உதவித் தொகை ரத்து செய்திருப்ப தில் எவ்விதமான நியாயமும் இல்லை. சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கல்வி உதவித் தொகை அளித்துவருவதற்கான நோக்கங்களும், கார ணங்களும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு வழங்குவது கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக மட்டுமல்ல. கல்விக்கான செலவினம் என்பதில்  எண்ணற்ற செலவுகள் அடங்கும். அரசுப் பள்ளிகள் மட்டுமே இல வச மதிய உணவு வழங்குகிறது. தனியார் பள்ளி களில் அத்தகைய வசதிகள் கிடையாது. காகி தங்கள், எழுதுபொருட்கள் மற்றும் பள்ளிகளில் பயன்படுத்தப்பட வேண்டிய பல்வேறுவிதமான பொருள்களின் விலைகளும் இன்றையதினம் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. எனவே பள்ளிகளில் படிப்பது என்பது விலையுயர்ந்த விவகாரமாக மாறியிருக்கிறது. மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல நாள்தோறும் போக்கு வரத்துக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்ப தும், கல்விச் செலவினத்தில் ஒரு பகுதி யாகும்.

கல்வி உதவித் தொகை வழங்குவதன் நோக்  கமே அம்மாணவர்களின் பெற்றோர்களின் கல்வி செலவினத்தில் ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காகவே ஆகும். கல்வி ஒன்று தான் கவுரவமான வாழ்க்கையை ஒருவருக்கு அளித்திடும்.  சேமநல அரசு என்பது தன் பிரஜை கள் அனைவருக்கும் குறிப்பாக விளிம்புநிலை யில் உள்ள, வசதியற்ற அனைவருக்கும் கல்வி அளிப்பதைத் தன் கடமையாகக் கொள்ள வேண்டும். இப்போது தன்னிச்சையாக கல்வி உதவித் தொகையை அளிக்காமல் ரத்து செய்திருப்பது, இவர்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். எனவே கல்வி உதவித் தொகை அளிப்பதை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்த ரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை  அளித்திட வேண்டும்.  இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.