நாகர்கோவில், அக்.12- கன்னியாகுமரி அருகே 12 ஏக்கர் பரப்பளவில் ரூ.150 கோடி யில் அமைய இருக்கும் விண் வெளிப் பூங்காவுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனா். இந்த எண்ணிக்கையை மேலும் அதி கரிக்கச் செய்யும் வகையில் ஒன் றிய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒருகட்டமாக கன்னியாகுமரி சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில் ரூ.150 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு அதிநவீன தொலை நோக்குக் கருவிகள், இந்தியா முதலில் விண்ணில் செலுத்திய செயற் கைக்கோள், ராக்கெட் முதல் தற்போதுள்ள செயற்கைக் கோள்கள் வரை அனைத்தும் இடம்பெற உள்ளன. முக்கியமாக, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதை இந்த மையத்தில் இருந்து காணும் வசதியும் அமைய உள்ளது. இந்நிலையில் இந்த விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா அமைப்பற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டன. விண்வெளி பூங்கா அமைய இருக்கும் இடத்தை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்கும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.