தஞ்சாவூர், செப்.28 - தஞ்சாவூர் அன்னை சத்யா விளை யாட்டு அரங்கில் தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்ட லம் சார்பில், 21 ஆவது மாநில உள்மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை துவங்கின. இதனை மாவட்ட ஆட்சியர் பா.பிரி யங்கா பங்கஜம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் இப்போட்டி களில் கலந்துகொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவ லர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். இதில், 34 மண்டலங்களைச் சேர்ந்த 871 பேர் கலந்து கொண்டனர். இப்போட் டிகளில் சனி, ஞாயிறு இரு தினங்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், மத்திய விளை யாட்டுக் குழும தலைவர் சென்னை மற்றும் பொது மேலாளர் மு.ராதா கிருஷ்ணன், மத்திய விளையாட்டுக் குழும செயலாளர் சென்னை மற்றும் பொது மேலாளர் ஸ்வெட்லானா ரகு ராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ), வி.கார்த்திகைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.