தோழர் ஜி.மணி நினைவேந்தல் நிகழ்ச்சி
புதுக்கோட்டை, ஜூன் 5 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில முன்னாள் பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முன்னாள் உறுப்பினருமான தோழர் ஜி.மணி நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் விழாயாக்கிழமை நடைபெற்றது. தோழர் ஜி.மணி அவர்களின் படத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், விதொச மாவட்டத் தலைவர் கே.சண்முகம், செயலாளர் டி.சலோமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே.முகமதலிஜின்னா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், எம்.ஆர்.சுப்பையா, எஸ்.கலைச்செல்வம், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.தேவமணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.லாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.