tamilnadu

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மூத்ததலைவர் தோழர் மைதிலிசிவராமனின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு

அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மூத்ததலைவர் தோழர் மைதிலிசிவராமனின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமையன்று (மே28) சென்னை சேத்துப்பட்டு நேருபூங்கா அருகே நடைபெற்றது. இதையொட்டி நிறுவப்பட்ட மைதிலிசிவராமன் நினைவு கொடி கம்பத்தில் சங்கத்தின் மூத்ததலைவர்களில் ஒருவரான சுபாஷினி அலி சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, வரவேற்புக் குழுத் தலைவர் ரோகிணி, அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, அகில இந்திய பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே, மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட தலைவர் சாந்தி நன்றி கூறினார்.

;