tamilnadu

img

தீக்கதிர் நாளிதழின் முன்னாள் பொது மேலாளருமான தோழர் ஏ.அப்துல் வகாபின் நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தீக்கதிர் நாளிதழின் முன்னாள் பொது மேலாளருமான தோழர் ஏ.அப்துல் வகாபின் நினைவு தினம் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. தேனி மாவட்டம் போடி கட்சி அலுவலகத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்விற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.செல்வராஜ் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்  எஸ்.கே.பாண்டியன் ஆகியோர் அப்துல் வகாபின் பணிகளை நினைவு கூர்ந்தனர்.