tamilnadu

img

தேர்வு முடிவில் குளறுபடி: கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் தேர்வு முடிவு வெளியானது. ஏராளமான மாணவர்கள் தேர்வை எழுதவில்லை எனவும் சிலருக்கு மதிப்பெண் பூஜ்ஜியம் என்றும் முடிவுகள் வந்துள்ளன. மேலும் மறுமதிப்பீடு செய்ய இளங்கலை தேர்வுத்தாள் ஒன்றுக்கு 400 ரூபாயும் முதுகலை தேர்வுத்தாள் ஒன்றுக்கு 800 ரூபாயும் தரவேண்டுமென பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வு குளறுபடிகளை சரி செய்து மறுமதிப்பீட்டுக்கான கட்டண தொகையை நீக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் திங்களன்று (ஏப் 3)  வகுப்புகளை  புறக்கணித்து போராட்டம் நடத்தினர். கிளைச் செயலாளர் அவினேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் லெனின், சௌமியா, அஜித்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.