மதுரை திருமங்கலத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து இதுவரை 35க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட அந்த மசோதாவுக்கு அவர் வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த நிலையில், மதுரை திருமங்கலத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் பொறியியல் கல்லூரி மாணவரான வினோத் குமார் (வயது 21), கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.