விழுப்புரம், ஆக.24- சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தந்தை பி.பழனி வேலுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை (ஆக.24) வாழ்த்துகளைத் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர கம் வந்த பழனிவேலுக்கு ஆட்சியர் பழனி பொன்னாடை அணி வித்து, புத்தகங்கள் வழங்கினார். தங்கள் மகன் திட்ட இயக்கு நராக இருந்து செயல்படுத்திய சந்திரயான் -3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் உலகுக்கே இந்தியா பெருமை சேர்த்துள்ளது. அதில் தங்களின் மகனின் பங்கு அளப்பரி யது என்று ஆட்சியர் பழனி தெரி வித்தார்.