சென்னை, மார்ச் 18- முதலமைச்சருக்கான பொரு ளாதார ஆலோசனைக் குழுவின் 3ஆவது கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது, அரசின் பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகளில் பொதுவான வழி காட்டுதல்களை வழங்கி வருகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பாகவும், மாநிலத்தின் மொத்த நிதி நிலை யைப் பாதுகாப்பதற்கான ஆலோ சனைகளையும் எடுத்துரைக்கிறது. மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித் தும் வலுவான ஆலோசனை வழங் கும் மையமாக இது விளங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3வது கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 17) நடைபெற்றது. இக்கூட்டத் தில் பேசிய முதல்வர் குழுவின் ஆலோ சனைகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், நிதி மேலாண் மைக்கும் மிக முக்கியமானவை என்று தெரிவித்தார். மேலும், இந்த அரசு பொறுப் பேற்றதிலிருந்து நிறைவேற்றிய திட்டங்களை பற்றி முதலமைச்சர் எடுத்துரைத்து, விரைவில் வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் படவுள்ளதையொட்டி, செயல்படுத் தப்படவுள்ள பல்வேறு புதிய திட்டங் கள் குறித்து குழுவின் மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.