tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விவசாயிகள் சங்க மாநிலத் தலைவராக டி.ரவீந்திரன் தேர்வு

திருப்பூர், மே 14 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திரு மூர்த்திமலையில் மே 13, 14  ஆகிய தேதிகளில் நடை பெற்றது.  அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா, மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி. நட ராஜன், பொருளாளர் கே.பி.பெருமாள், துணைத் தலைவர் பி. டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக டி. ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

ஜனாதிபதியுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

புதுதில்லி, மே 14 - இந்திய குடியரசுத் தலை வர் திரவுபதி முர்முவை, முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் தினேஷ் கே. திரிபாதி ஆகி யோர் சந்தித்து, ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றியும் இந்தியா - பாகிஸ்தானின் தற்போதைய நிலை பற்றி யும் விளக்கமளித்தனர்.  அப்போது பாகிஸ்தா னுக்கு தகுந்த பதிலடி  கொடுத்த இந்திய பாது காப்புப் படைகளின் வீரத்தை யும் அர்ப்பணிப்பையும் குடி யரசுத்தலைவர் பாராட்டிய தாக குடியரசுத்தலைவர் மாளிகை செய்தி வெளி யிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

சென்னை, மே 14 - பத்து மற்றும் பதி னொன்றாம் வகுப்பு மாண வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 19  அன்று வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு முன்ன தாக வெள்ளிக்கிழமை (மே 16) அன்றே வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.  தேர்வு முடிவுகள் வெளி யான உடன் மாணவர் களுக்கு, அவர்கள் தேர் வுக்கு முன்பு கொடுத்திருந்த செல்போன் நம்பருக்கு எஸ்எம்எஸ் மூலம்  அனுப் பப்படும். தேவைப்பட்டால், அரசுத் தேர்வுத்துறை இணைய தளத்தில் மாண வர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.