tamilnadu

img

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறப்பு

சென்னை, டிச.29 - கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனை யத்தை சனிக்கிழமையன்று (டிச. 30)  முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் ‘கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலையத்தின் பணிகள் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் மழைநீர் வடி கால் அமைப்பது, பேருந்து நிலை யத்தில் பேருந்துகள் வந்து செல்ல வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. மீதமுள்ள பணிகள் முடிக்கப் பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தை சனிக்கிழமை (டிச.30) திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம் பாக்கத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிலைய திறப்பு விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு காவல்  துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரி களுடன் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அலுவல கக் கூட்டரங்கில் ஆலோசனை செய்தார். இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கி றார்.