சண்டிகர், ஏப்.23- “வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம், மதவெறியர்களின் நட வடிக்கைகளை முறியடிப்போம்” என்று சிஐடியு பொதுக்குழுக் கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்தியத் தொழிற்சங்க மைய (சிஐடியு) பொதுக்குழுக் கூட்டம் சண்டிகர் நகரில் பாக்னா பவனில் வெள்ளியன்று தொடங்கியது. கூட்டத்துக்கு முன்பு சிஐடியு தலைவர் டாக்டர் கே. ஹேமலதா, செங்கொடியை ஏற்றிய பின்னர் தியாகிகள் ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச் செயலா ளர் தபன் சென், மாமேதை லெனின் உருவப்படத்திற்கு அவருடைய 152ஆவது பிறந்த நாளையொட்டி செவ்வணக்கம் செலுத்தினார். இதன்பின் நிர்வாகக்குழுக் கூட்டம் தொடங்கியது. வரவேற்புக்குழுத் தலைவர் உஷா ராணி, தன்னுடைய வரவேற்பு ரையில் பஞ்சாப்பின் குறிப்பாக சண்டிகரின் புரட்சிகர பாரம்பரி யத்தை நினைவுகூர்ந்தார். காலிஸ் தான் தீவிரவாதிகள் போராட்டம் பஞ்சாப்பில் நடைபெற்ற சமயத்தில் சிஐடியுவின் மோஹாலி, கரார், தேரா பாசி போன்ற நகரங்களின் பல தலைவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தபோதிலும், சிஐடியு தன் செங்கொடியைத் தாழ விடாமல் உயர்த்திப்பிடித்தது என்ப தைச் சுட்டிக்காட்டினார். கே. ஹேமலதா தலைமையுரை யாற்றினார். அவர் தன் தலைமை யுரையில், நாட்டில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் மற்றும் தொழிலா ளர்களின் பல்வேறு போராட்டங்க ளையும் பட்டியலிட்டார்.
கிசான் மோர்ச்சாவுக்கு நன்றி
அகில இந்திய வேலை நிறுத் தத்திற்கு விவசாயிகளின் மாபெரும் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆதரவு அளித்ததுடன் ‘கிராம ஹர்த்தால்’ நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார். நாம் நன்கு திட்டமிட்டு மேற் கொள்கிற அனைத்து போராட்ட நட வடிக்கைகளுமே மாபெரும் வெற்றி பெறுவதையும், போரா ட்டங்களுக்குப்பின் தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வு மட்டம் உயர்வ தையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். “ 2008-09களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து உலகம் இன்னமும் மீளவில்லை. இதன் விளைவாக வேலை இழப்பு கள், வருமான இழப்புகள், தொழி லாளர்களின் பணிநிலைமைகள் சீர்கேடு அடைந்து வருதல், வாங்கும் சக்தி குறைந்து வருதல் ஆகிய வையும் தொடர்கின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.
ஒன்றிய அரசு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே சமயத்தில், நாட்டின் சுதந்திரப்போராட்டத்தில் எவ்விதப் பங்கினையும் செலுத்தாத, இதன் மூளையாக இருந்து செயல்படும் பாசிச ஆர்எஸ்எஸ், நாட்டு மக்களை மதத்தின் பேரால், பிராந்தியத்தின் பேரால், மொழியின் பேரால், சாதி யின் பேரால் சீர்குலைக்க மேற் கொள்ளும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினார். சமீபத்தில் பல மாநிலங்களில் ராம நவமியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் செயல்படும் விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள வெறிக் கும்பல்கள் முஸ்லீம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கோஷங்க ளை எழுப்பி கலவரங்களை ஏற் படுத்தியதையும் அதற்கு எவ்வா றெல்லாம் காவல்துறையும், நிர்வாகமும் உடந்தையாக இருந்தன என்பதையும் சுட்டிக்காட்டினார். இவ்வாறு உண்மையான பிரச்ச னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிடவே இத்தகு இழிசெயல்களில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.
இத்தகுநிலையில் எதிர்கால நடவடிக்கைகளை இக்கூட்டம் விவாதித்து, திட்டமிடும் என்றும், குறிப்பாக அமைப்பை வலுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் கூறினார். “வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம், மதவெறி அணி திரட்டலை முறியடிப்போம்” (‘Uphold Class Unity; Defeat Com munal Polarisation’), எனும் முக்கி யமான தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.பொதுச் செயலாளர் தபன்சென் தன் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.இதன் மீது அடுத்து இரு நாட்களும் விவா தங்கள் நடைபெறுகின்றன. கூட்டம் 24 அன்று நிறைவுறுகிறது. இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் நிர்வாகக்குழுக் கூட்டமும் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு சிஐடியு- வின் துணைத் தலைவர் மெர்சி குட்டி அம்மா தலைமை வகித்தார். சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் துவக்கவுரையாற்றினார். தேசிய கன்வீனர் ஏ.ஆர். சிந்து அறிக்கையை சமர்ப்பித்தார். பிரதிநிதிகளின் விவாதங்களுக்குப் பின் அறிக்கை நிறைவேறியது. இதன்படி அகில இந்திய உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப் புக்குழுக் கூட்டத்தின் 12ஆவது தேசிய சிறப்பு மாநாடு வரும் மே 21-22 தேதிகளில் கொல்கத்தா வில் நடைபெறும். சிஐடியு தலை வர் ஹேமலதா நிறைவுரையாற்றி யதைத் தொடர்ந்து இக்கூட்டம் முடிவுற்றது.
(சண்டிகரிலிருந்து ஆர்.கருமலையான், செயலாளர், சிஐடியு)