tamilnadu

img

ஈவிரக்கமின்றி உறிஞ்சப்படும் இந்திய தொழிலாளர்கள்

புதுதில்லி, ஜன. 16 - முதலாளித்துவ சுரண்டலின் நவீன வழிமுறைகள் மேலும் மேலும் தீவிர மடைந்துவரும் நிலையில், முதலாளி - தொழிலாளி உறவுகளின் அடிப்படை அம்சங்கள் கற்பனை செய்ய முடி யாத அளவிற்கு மிகப்பெரும் மாற்றங் களுக்கு உள்ளாகி வருகிறது என்கிறார் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான்.  இந்த மாற்றங்கள் தொழிலாளி வர்க்கத்தின் சேர்மானத்திலேயே மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு இட்டுச் செல்கிறது என அவர் குறிப்பிடு கிறார். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 17வது அகில இந்திய மாநாடு ஜனவரி 18 அன்று பெங்களூரில் துவங்குகிறது. ஜனவரி 22 வரை நடை பெற உள்ள இம்மாநாட்டில் நாடு முழு வதும் இருந்து 1500க்கும் மேற்பட்ட  பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார் கள். இந்த மாநாடு, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரச்சனைகளை மிக விரிவாக ஆராய உள்ளது. 

வேலைவாய்ப்பு  உறவுகளில் மாற்றம்

அத்தகைய ஆய்வுகளில் மிக முக்கியமானது, இந்தியாவில் வேலைவாய்ப்பு உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றியது ஆகும்.  இதுதொடர்பாக தீக்கதிருக்கு ஆர். கருமலையான் அளித்த சிறப்புப் பேட்டியில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வருமாறு: நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் அமலாக்கம் மேலும் மேலும் தீவிரமடைந்துள்ள நிலை யில், இந்தியாவில் தொழி லாளர்களின் உண்மை ஊதியம், வேலைவாய்ப்புக்கான சூழலும் வேலைவாய்ப்பின் தரமும் மாறியுள்ள நிலை, பணி நிலைமைகள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆகிய மூன்று அம்சங்கள் மிகப்பெரும் ஆய்வுக்கு உரியவையாக மாறியுள்ளன.

‘நெகிழ்வுத்தன்மை’  என்றால் என்ன?

சமீபகாலமாக “நெகிழ்வுத்தன்மை யுடன் கூடிய உழைப்புச் சந்தை” என்ற பதத்தை முதலாளி வர்க்கம் முன்வைக் கிறது. இதன் பொருள் என்னவென்றால் உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான உறவில் உழைப்புக்குச் சாதகமாக இருக்கக்கூடிய சிற்சில அம்சங்களையும் முற்றாக நீக்குவது;  சட்டப்பூர்வமான விதிகள் மற்றும்  கட்டுப்பாடுகள் மூலமாக உருவாக்கப் பட்டுள்ள உழைப்புக்குச் சாதகமான பாதுகாப்பு அம்சங்களை வெட்டி யெறிவது என்பதுதான். இதன் நுட்பமானப் பொருள், எந்தத் துறையிலும் தொழிலாளர்களை முதலாளிகள் தங்கள் இஷ்டத்திற்கு அமர்த்துவது, துரத்துவது என்ற கொள்கையை ஈவிரக்கமின்றி அமலாக்குவது என்பதுதான்.  நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய உழைப்புச் சந்தை என்பதை பல்வேறு வழிகளில் முதலாளித்துவம் அமலாக்கு கிறது. காண்ட்ராக்ட்மயம், நிறுவனத் திற்கு வெளியில் வேலைகொடுத்து வாங்குவது (அயல்பணி - அவுட் சோர்சிங்), தினக்கூலி முறை தீவிரம்,  நிரந்தர ஊழியர்கள் செய்யும் அதே வேலையை தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் தொழில் பழகுநர்கள் மூலமாக செய்து கொள்வது, வீட்டிலிருந்தே வேலை போன்ற புதிய முறைகளை கண்டு பிடித்து, தொழிலாளர்களின் உழைப்பை குறைந்த கூலிக்கும் மிக  அதிக நேரத்திற்கும் உறிஞ்சுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

‘பணித் திறனை’ அதிகரித்துக் கொள்ளுங்கள்

பணிப்பாதுகாப்பு என்பது தற்போது  மறுக்கப்பட்ட ஒன்றாக மாறியிருக் கிறது. அதற்கு பதிலாக, எந்தநேரத்தி லும் எந்த தன்மை கொண்ட வேலையை யும் செய்வதற்கான திறனை வளர்த்துக் கொள்வது என்ற இடத்திற்கு தொழி லாளர்களை முதலாளித்துவம் தள்ளி யிருக்கிறது. “பணிப்பாதுகாப்பு” என்பதை மாற்றி “பணித்திறன் அதி கரிப்பு” என்பதாக தற்போது முத லாளித்துவ உழைப்புச் சந்தையில் குறிப் பிடப்படுகிறது. இதன்பொருள், ஒரு  முதலாளி, ஒரு ஊழியருக்கு அல்லது  தொழிலாளிக்கு எந்தவொரு நீண்ட கால வேலைப் பாதுகாப்பையும் வழங்க மாட்டார் என்பதுதான். அதற்கு பதி லாக சம்பந்தப்பட்ட தொழிலாளி தனதுதிறனை வளர்த்துக் கொண்டு, வேறுவேறு வேலைகளை தேடிக்கொள் வதற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ள வேண்டும்; ஒரு நிறுவனத்தில் வேலை பறிக்கப்பட்டால் வேறொரு நிறுவனத்திற்கு சென்றுகொள்ளலாம்; அல்லது திறந்தவெளி உழைப்புச் சந்தையில் தனது புதிய திறனுக் கேற்றவாறு வேலையைத் தேடிக்கொள்ளலாம்.  இதன்மூலம், பணிப்பாதுகாப்பு என்ற சட்டப்பூர்வ உரிமை பறிக்கப்பட்டு, முற்றிலும் நிரந்தரமற்ற பணி, முற்றிலும் உத்தரவாதமற்ற பணி, முற்றிலும் உத்தரவாதமற்ற ஊதியம் அல்லது கூலி, முற்றிலும் உத்தரவாதமற்ற எதிர்காலம் என்ற நிலைக்கு தொழிலாளர்களை முதலாளித்துவம் தள்ளியிருக்கிறது. “பணித்திறன் அதிகரிப்பு” என்ற இந்த புதிய விவாதம், சமீபகாலமாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மையமான இடத்திற்கு வந்துள்ள பின்னணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல துறைகளில் தானியங்கி முறை,  செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களால் இயக்குதல் போன்ற புதிய முறைகள், உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் நடைமுறைகளில் மனிதர்களை வெளியேற்றிவிட்டு இயந்திரங் களை பயன்படுத்துவதற்கான புதிய வாய்ப்பு களை முதலாளித்துவத்திற்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இது தொழிலாளி வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பை கடும் தாக்குதலுக்குள்ளாக்கியிருக்கிறது. 

பலவந்தமாக நீக்கப்படும் ‘குறைந்தபட்ச ஊதியம்’

மேலும், “பணித்திறன் அதிகரிப்பு” என்ற  புதிய கோட்பாடு, ஏற்கெனவே சட்டப்பூர்வ மாக உறுதிசெய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்ற வருமானப் பாது காப்பையும் பலவந்தமாக நீக்குகிறது. ஏற்கெனவே ஆளும் வர்க்க அரசுகளின் கொள்கை கள், சட்டப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்ற கோட்பாட்டை முறையாக அமலாக்காததன் விளைவுகளை தொழிலாளர்கள் அனுபவித்து வரு கின்றனர். இந்த நிலையில் அதுவும் தாக்கு தலுக்குள்ளாகியுள்ளது. 

முற்றிலும் முறைசாரா பண்டமாக ‘உழைப்பு’

மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடை யிலான மோதலில் நவீன தாராளமய அரசுகள் மூலதனத்தின் கரங்களை மேலும் மேலும் வலுப்படுத்துகின்றன; உழைப்பின் கரங்களை கடுமையாக பலவீனப்படுத்துகின்றன. இதன் விளைவு, உழைப்பின், உழைப்பாளிகளின் பேரம்  பேசும் சக்தி குறி வைத்து தாக்கப்படுகிறது. குறிப்பாக, முறைசார் வேலை படிப்படியாக குறைக்கப்பட்டு, முற்றிலும் முறைசாராத பண்ட மாக தொழிலாளியின் உழைப்பு என்பது மாற்றப் பட்டு வருகிறது. அப்போதுதான் பெரும் கார்ப்ப ரேட்டுகளின் சுரண்டலுக்கு ஏற்றவாறு குறைந்த  கூலிக்கு தொழிலாளியின் உழைப்பு கிடைக்கப் பெறும்; இதற்கான திட்டமிட்ட நடைமுறைகளை முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. இதன்நோக்கம், மிக அதிகப்படியான உபரி உழைப்பை தொழிலாளியிடமிருந்து உறிஞ்சுவது என்பதுதான். 

90சதவீதம் முறைசாரா வேலைகள்

1990களில் இந்தியாவில் பொருளாதார நவீன தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரையிலும் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகளில் 90சதவீதம் முறைசாரா வேலைகள்தான். இதன்விளைவாக, தொழிலாளிக்கு ஏற்கெனவே கிடைத்துவந்த பாதுகாப்பு அடித்துநொறுக்கப்பட்டுள்ளது.  முறைசாரா உழைப்பு என்பது முற்லும் மிக மிகக் குறைந்த கூலி உழைப்பே ஆகும்.  இதைத்தான் மிகப்பெரும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகின்றன.  இந்தியாவில் தொழிற்சாலைகள் சர்வே 2017 - 18ன்படி, மொத்தமுள்ள உற்பத்தி சார் தொழிற்சாலைகளில் 6.02 கோடி தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்; அவர்களில் 1.23 கோடி தொழிலாளர்கள்தான் முறைசார் உற்பத்தி துறைகளில் பணியாற்றுகின்றனர். கிட்டத்தட்ட 80 சதவீதம் தொழிலாளர்கள் முற்றிலும் முறை சாரா பிரிவுகளில்தான் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பொருள் உற்பத்தியில் 40சதவீதம் முதல் 70சதவீதம் வரை முறைசாரா  தொழிலாளர்களின் உழைப்பால் உருவானவையே. 

அதிகரிக்கும் காண்ட்ராக்ட் மயம்

அதேபோல, அனைத்து உற்பத்தித் துறை களிலுமாக காண்ட்ராக்ட்மயம் என்பது மிகப்பிர தான பிரச்சனையாக மாறியுள்ளது. முன்பெல் லாம், குறிப்பிட்ட சீசன்களுக்கான உற்பத்தித் துறைகளில் மட்டும்தான் காண்ட்ராக்ட்மயம் இருந்தது. தற்போது அந்த வேறுபாடு இல்லை. நிரந்தரமான தேவைகொண்ட உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிலும் முற்றிலும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் நியமிக்கப்படுவது தீவிரமடைந்துள்ளது.  இந்தியாவின் மொத்த உழைப்புப் படையில் 1997-98ல் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் எண்ணிக்கை 16சதவீதமாக இருந்தது; 2017-18ல் இது 36.4சதவீதமாக அதிகரித்தது.  நிரந்தர தன்மைவாய்ந்த உற்பத்தித் தொழில் களில் ஈடுபட்டுள்ள மத்திய பொதுத்துறை நிறு வனங்களில் கூட காண்ட்ராக்ட்மயம் அதி கரித்துள்ளது. காண்ட்ராக்ட் தொழில்களுக்கான பாதுகாப்பு விதிகளையும் கூட, சமீபத்திய புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களின் மூலம் ஆட்சியாளர்கள் காலி செய்துவிட்டனர்.  புதிய தொழில்நுட்ப மாற்றங்கள், ஆளும் வர்க்கங்களின் மூலதனத்தின் நலன்களை பாது காப்பதற்கான கருவிகளாக பயன்படுத்தப்படு கின்றன. மனிதர்களின் உழைப்பு அதிகமாக தேவைப்படும் பழைய வடிவத்திலான உற்பத்தி  முறைகள் மாறுகின்றறன. நவீன இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் மூலமாக உற்பத்தியை மேற்கொள்வது என்ற நிலை தற்போது ஏற்பட்டு  வருகிறது. மாமேதை காரல்மார்க்ஸ் நூறு ஆண்டு களுக்கு முன்பு தீர்க்கதரிசனமாக குறிப்பிட்டது போல, “பொருள் உற்பத்தி நடைமுறையின் முதன்மையான செயல்பாட்டாளராக தொழிலாளி இருந்த நிலை மாறி, அந்த உற்பத்தி நடை முறையின் ஒரு ஓரத்தில் அவர் நிறுத்தப்படுகிற நிலைமை உருவாகும்” என்பது இன்றைக்கு நடைமுறையாக மாறியிருக்கிறது.

‘கிக் பொருளாதாரம்’

இதன் ஒரு பகுதியாக ‘கிக் பொருளா தாரம்’ என்று அழைக்கப்படும்- எவ்வித பணிப்பாது காப்பும் இல்லாத, எவ்வித நிறுவனத்தின் சட்டப்பூர்வ ஊழியராக அல்லாத, ஆனால் அந்த நிறுவனத்தின் லாபத்திற்காக உழைப்பைச் செலுத்துகிற ஒரு படையை முதலாளித்துவம் உருவாக்கியிருக்கிறது. இவை தவிர தொழில் பழகுனர்கள் என்ற பெயரிலும், குறிப்பிட்ட காலத்திற்கான வேலை வாய்ப்பு என்ற பெயரிலும் ஆளும் வர்க்க அரசுகள்  புதிய வடிவிலான உழைப்புச் சுரண்டல் முறை களை உருவாக்கியுள்ளன. சுயவேலைவாய்ப்பும், நாள் முழுவதும் உழைப்பைச் செலுத்தினாலும் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை என்ற நிலையை நோக்கி மக்களைத் தள்ளியுள்ளது. சுமார்  60சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள னர். இதையும் சுயவேலைவாய்ப்பு என்ற சட்டகத் திற்குள் அடைத்துள்ளனர் ஆட்சியாளர்கள். ஏற்கெனவே அரசுத் துறையில் உள்ள எந்த வொரு ஊழியர்க்கும் தொழிலாளிக்கும் பாது காப்பு இல்லை என்ற நிலை தீவிரமடைந்துள்ளது.

மொத்தத்தில் மாமேதை மார்க்ஸ் சொன்னது போல, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை முற்றிலும் உறிஞ்சப்பட்ட, கொடிய சுரண்ட லுக்குள்ளாக்கப்பட்டு சக்கைகளாக வெளி யேற்றப்படும் தன்மை கொண்டதாக மாற்றப் பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் முந்தைய காலத்தை போல் அல்லாமல் தற்போது பல  பிரிவுகளாக சிதறடிக்கப்பட்டுள்ள தொழிலாளி வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக ஒன்றுபடுத்துகிற பெரும் கடமை, தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு இருக்கிறது. அந்தப் பணியை எப்படி வலுவாக முன்னெடுத்துச் செல்வது என சிஐடியு அகில இந்திய மாநாடு விவாதிக்கும். இவ்வாறு ஆர்.கருமலையான் விவரித்தார்.

தொகுப்பு : எஸ்.பி.ஆர்.