மதுரை, ஜூலை 30- குடிமராமத்துப் பணிகளை நீரிணைப் பயன்படுத்துவோர், விவசாயிகளை வைத்து மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழகத்தில் நீரினைப் பயன்ப டுத்துவோர் சங்க விவரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட விவசாய சங்க கெளரவத் தலைவர் சத்தியமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தாக்கல் செய்த மனுவில், தமிழ கத்தில் குடிமராமத்து பணி என்ற பெய ரில் நீர் நிலைகள் தூர்வாரப்படுகின்றன. இப்பணிக்காக 2016- 2017 நிதியாண்டில் ரூ.நூறு கோடி, 2017- 2018 நிதியாண்டில் ரூ.329.95 கோடி, 2019- 2020 நிதியாண்டில் ரூ.499.688 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்துப் பணியை தமிழ்நாடு விவ சாயிகள் மேலாண்மை முறைகள் சட்டம்- 2000 அடிப்படையில் உருவாக்கப் பட்ட விவ சாயிகள் சங்கம் மற்றும் 1975-ல்குடிமரா மத்து பணிக்காக பொதுப்பணித் துறையால் உருவாக்கப்பட்ட விவசாயிகள் குழுவை வைத்து மேற்கொள்ள வேண்டும். ஆனால் சென்னை, மதுரை, திருச்சி ராப்பள்ளி, கோயம்புத்தூர் மண்டல பொதுப் பணித்துறை அதிகாரிகள் குடிமராமத்துப் பணிகளை நீரினைப் பயன்படுத்துவோர், விவசாயிகள், ஆயக்கட்டுதாரர்களைக் கொண்டு மேற்கொள்வதில்லை. 85 சத வீதமான குடிமாராமத்துப் பணிகள் ஆயக்கட்டு தாரர்களுக்கு தெரியாமல் பிற பொதுப் பணித்துறை பணிகளைப் போலவே மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் அல்லாதவர்களை கொண்டவர்களால் தொடங்கப்படும் புதிய அமைப்புகளுக்கு குடிமராமத்துப் பணிகள் வழங்கப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஏழு பேர் சேர்ந்து நீரினைப் பயன் படுத்துவோர் சங்கங்களைத் தொடங்கி, ஆயக்கட்டுதாரர்கள், விவசாயி கள் இல்லாமல் குடிமராமத்துப் பணி மேற்கொள்கின்றனர். குடிமராமத்துப் பணிக்காக கண்மாயை தேர்வு செய்வதை ரகசியமாக வைத்துள்ள னர். இப்பணி தொடர்பாக தமிழக அரசு 10 அர சாணைகளை பிறப்பித்துள்ளது. அதில் இரண்டு அரசாணைகளை மட்டுமே பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். எஞ்சிய அர சாணைகளை ரகசியமாக வைத்துள்ளனர். எனவே புதிய சங்கங்களுக்கு குடிமரா மத்துப் பணி வழங்க வகை செய்யும் அர சாணை விதி 9 (வி) சி செல்லாது என அறி வித்து, தமிழ்நாடு விவசாயிகள் மேலாண்மை முறைச் சட்டம்- 2000 அடிப்படையில் ஏற்ப டுத்தப்பட்ட விவசாயிகள் சங்கம், 1975-ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறையால் குடி மராமத்துப் பணிக்காக தொடங்கப்பட்ட விவ சாயிகள் கவுன்சிலுக்கு மட்டும் குடிமரா மத்துப் பணி வழங்கவும், தமிழ்நாடு முழு வதும் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங் களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராய ணன், புகழேந்தி அமர்வில் திங்களன்று விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராஜா கார்த்திகேயன் வாதிட்டார். அரசுத் சார்பில் இதே கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு ஒன்று தாக்கலாகி நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பி்ன்னர் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் விபரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 19 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.