25 ஆண்டு நிறைவு நாள் விழாவில் சொக்கிக்குளம் உழவர் சந்தை மதுரை, ஏப்.16- மதுரை மாவட்டத்தில் 7 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அவற்றில் கிருஷ்ணாபுரம் காலனி தபால் தந்தி நகர் மெயின் ரோடு சொக்கிகுளம் உழவர் சந்தை துவங்கப்பட்டு 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி புதனன்று உழவர் சந்தையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமை வகித்தார். உழவர் சந்தைக்கு தொடர்ச்சியாக வருகை தந்துள்ள விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களை கவுர வித்து அவர்களின் தேவைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். பின்னர் உழவர் சந்தை நடை மேடை பேவர் பிளாக் மூலம் புனரமைக்கப்பட்டுள்ள தையும், புனரமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கை யும் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறு வனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடையினை பார்வையிட்டார். உழவர் சந்தை விவசாயிகளுக்கு புது மின்னணு எடை பார்க்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பி.சுப்புராஜ் முன்னிலை வகித்தார். வேளா ண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம் ) வி. மெர்சி ஜெயராணி, செயலாளர் மதுரை விற்பனைக்குழு அ.அம்சவேணி, வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி, உழ வர் சந்தை பணியாளர்கள் மாரிமுத்து, பாக்கியநாதன், காதர் மற்றும்
விவசாயிகள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். பெண்களிடம் நகை பறிப்பு
ஒட்டன்சத்திரம், ஏப்.16- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி எதிரே வசித்து வருபவர் அப்துல்லா மனைவி நூர்ஜகான் (80). அப்துல்லா ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனது சொந்த வீட்டில் முதல் மாடியில் தனியாக வசித்து வருகிறார். நூர்ஜகான் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத ஒரு நபர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக் குள் புகுந்து நூர்ஜகானை தாக்கி மிரட்டி அவர் அணிந்தி ருந்த தங்கச் செயின்கள், காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மோதிரம் என மொத்தம் 4 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி யோடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்
சின்னாளப்பட்டி, ஏப்.16- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களுக்கு தர்ஷிகா ஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளார். இந்நிலையில், அங்கன்வாடியில் தர்ஷிகா உட்பட 13 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு பாப்பாத்தி என்பவர் ஆசிரியராகவும் சுரைக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் ஆயாவாகவும் பணிபுரிந்து வருகின்றனர். செவ்வாயன்று அங்கன்வாடி சென்று திரும்பிய தர்ஷிகா ஸ்ரீ சோகமாக காணப்பட்டதால் பெற்றோர் என்ன வென்று விசாரித்ததில் கழுத்தில் கரண்டியால் ஆயா சூடு வைத்ததாக கூறியதையடுத்து கன்னிவாடி போலீசில் புகார் அளித்தனர். கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு சின்னாளபட்டி, ஏப்.16- கிராம ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஜி.நடுப்பட்டி ஊராட்சியில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப் பில் கட்டப்பட்ட சமுதாயக் கூட திறப்பு விழா நடை பெற்றது. இதில் பங்கேற்க வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி யிடம் ஆதிதிராவிடர் காலனி மக்கள் தங்களுக்கு கலை ஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வழங்க ஊரா ட்சி செயலர் நந்தகோபால் மறுப்பதாக புகார் செய்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, புகார் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
சின்னாளப்பட்டி, ஏப்.16- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55). இவர் நவாமரத்துப்பட்டியில் இருந்து கேத்தம்பட்டியை நோக்கி நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் பாப்பாத்தியிடம் வழி கேட்பது போல் பேசி அவர் கழுத்தில் இருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இதில் பாப்பாத்திக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நகை பறிப்பு சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.