மயிலாடுதுறை, அக்.9 - திருமெய்ஞானம் தியாகிகளில் ஒருவரான நாகூரான் மனைவி சின்னப் பொண்ணு உடல் நலக்குறைவால் ஞாயி றன்று காலை காலமானார். அவருக்கு வயது 82. 1982 ஆம் ஆண்டு ஜன.19 அன்று நடந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் திருக்கடையூர் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சான், நாகூரான் ஆகியோர் பங்கேற்றனர். எம்.ஜி.ஆர். தலைமையிலான அப்போதைய அதிமுக அரசின்கீழ் செயல்பட்ட காவல்துறை, அவர்களை கண்மூடித்தன மாக சுட்டுக்கொன்றது. போராட்டக் களத்தில் உயிர்நீத்த இரு தியாகிகளை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நினை வுகூர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 19 அன்று தியாகிகள் தினத்தை கடை ப்பிடித்து வருகிறது. அந்த தியாகிகளில் ஒருவ ரான நாகூரானின் மனைவி சின்னப் பொண்ணு தனது இரு மகன்களுடன் திருமெய்ஞானம் வடக்குத்தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஞாயிறன்று அவ ரது வீட்டில் காலமானார். இதுகுறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.கலைச்செல்வி, மூத்த தோழர் டி.கோவிந்தசாமி, ஒன்றியக் குழு உறுப் பினர் கே.தமிழ்வாசகம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.