கி.அமுதா செல்வி
“பள்ளிக்கூடம் விட்டு வந்தோமா? படிச்சோமா? வீட்டுப்பாடம் எழுதினோமான்னு இருக்கானா? இந்தப் பய. எப்போ.... பாரு மொட்டமாடிக்கு ஓடிறது. இரு...இரு உங்க அப்பா வந்ததும் சொல்லித்தாரேன் பாரு.” என்று கத்தும் ஆச்சியின் சத்தம் ஆல்ரின் காதில் விழவில்லை. ஆல்ரின் வானத்தைக் காட்டி எதையோ ஆர்வமாய் சொல்லிக்கொண்டிருந்தான். அவனின் காலை உரசிக்கொண்டு படுத்திருந்தது சோனு. வாலை ஆட்டிக் கொண்டு, அவனையும் வானத்தையும் மாறி மாறிப் பார்த்தது. ‘சோனு’ ஆல்ரின் ஆசையாக வளர்க்கும் நாய். “சோனு அங்க பாரு அது தான் வேட்டைக்காரன் நட்சத்திரக்கூட்டம்.” ‘வவ்’... என்று குரைத்துக்கொண்டே வாலை ‘வவ்’ ஆட்டியது. அது பாவம்... அதுக்கு என்ன புரியும்? சோனுவுக்கு எப்படியாவது புரிய வைக்க வேண்டும். அவன் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தான். ஆல்ரினுக்கு இருட்டு என்றால் பிடிக்கும். இருட்டு வருவதற்கு முன்பே மொட்டை மாடிக்குச் சோனுவுடன் சென்று விடுவான். “எப்படா இருட்டு வரும்.” இரண்டு பேரும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். “இவன் வயசு குழந்தைகளுக்கு இருட்டு தரும். இவன் என்னடான்னா இருட்டே கெடக்கான்.” பயத்தைத் கதின்னு “என்னவாக இருக்கும்?!” ஆச்சிக்கு குழப்பமாய் இருந்தது. “பிள்ளையைக் காத்து கருப்பு அடிச்சிருக்குமோ?” பதறினாள். ஊர் பூசாரி கிட்ட வேப்பிலை அடிக்க அழைத்துப் போனாள்.
பூசாரி கை நிறைய விபூதியை அள்ளி ஆல்ரின் தலையில் போட்டார். நெற்றியிலும் பூசினார். சோனு ஆல்ரினை விநோதமாகப் பார்த்தது. பூசாரியைப் பார்த்து ‘வவ்’... ‘வவ்’... என்றது. சோனு தலையிலும் கொஞ்சம் விபூதியைப் போட்டார் பூசாரி. அது தலையை ஒரு சிலுப்பு சிலுப்பியது. மூவரும் வீடு வந்தனர். மாலை வந்தது. சோனுவும் ஆல்ரினும் மொட்டை மாடிக்குச் சென்றனர். நேரமானது. நிலா மேகத்தைத் தாண்டி மெல்ல எட்டிப்பார்த்தது. வானம் மிகவும் அழகாக இருந்தது. முழு வட்ட நிலா ஜோராக தெரிந்தது. கொஞ்ச தூரத்தில் நட்சத்திரங்கள் மின்னியது. “ஏய் சோனு அங்க பாரு..... நிலா பக்கத்தில பாரு. ஆரஞ்சும் லேசான சிவப்புமாய் குட்டியோண்டு வட்டம் தெரியுது பாரு. அதுதான் செவ்வாய் கிரகம். இந்த மாதம் முழுவதும் செவ்வாய், நிலா பக்கத்துலதான் இருக்குமாம்.’ “இப்படி வருடதிற்கு ஒரு முறையாவது வருமாம்.” சோனுவும் எதையோ புரிந்தது போல் வேகமாய் வாலாட்டியது. வாலை விறைப்பாய் நிமிர்த்தி தலையை இன்னும் தூக்கி அண்ணார்ந்து பார்த்தது “சோனு நாம ரெண்டு பேரும் ஒரு நாள் அங்க போவோம்” என்றான். சோனுவும் வேகமாய் வாலை ஆட்டியது. இன்னும் நருக்கமாய் அவனை உரசிக்கொண்டு நின்று கொண்டது. “சோனு நாம இங்க இருந்து செவ்வாய்க்குப் போறதுக்கு 9 மாதங்கள் ஆகும் தெரியுமா?” ‘வவ்’ ....’வவ்’... என்றது. தினமும் மொட்டை மாடிக்குப் போனார்கள். வானத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். தினம் புதிய விஷயத்தை வானம் கற்றுக் கொடுத்தது. நட்சத்திரக் கூட்டங்களை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வால்நட்சத்திரம் கடந்து போகும். அப்பொதெல்லாம் “என் வாழ்க்கையில் மேஜிக் நடக்கணும்” என்று நினைத்துக் கொள்வான் ஆல்ரின். அன்று சந்திர கிரகணம். இருவரும் மொட்டை மாடிக்குக் கிளம்பினர். . ‘அதெல்லாம் மூடநம்பிக்கை.” “இன்னிக்கு சந்திர கிரகணம்டா. மாடிக்கு போகக்கூடாது” என்று ஆச்சி சொல்லியும் ஆல்ரின் கேட்கவில்லை. ‘நான் பார்ப்பேன்” என்று அடம் பிடித்தான். “பார்த்தால் கெடுதல் வரும்” என்றாள் ஆச்சி கிரகணம் என்பது சாதாரண நிழல் விளையாட்டு ஆச்சி.” முகத்தை திருப்பிக் கொண்டு மொட்டை மாடிக்கு விருட்டென்று சென்றான். பின்னாடியே சோனுவும் துள்ளிக்கொண்டு ஓடியது. “நீயும் அவன் பின்னாடியே திரி...” காலியான தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்தார் ஆச்சி. ‘வவ்’....’வவ்’..என்று குரைத்துக்கொண்டே சோனு வேகமெடுத்து ஓடியது.