tamilnadu

img

சிதம்பரத்தில் குழந்தை திருமணம் புகைப்படத்துடன் அம்பலம்

சிதம்பரம், மே 29 - சிதம்பரத்தில் கடந்த ஆண்டு தீட்சி தர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் தீட்சிதர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கோயில் வழக்குரைஞர் சந்திரசேகர் தீட்சிதர்களின் குழந்தை களுக்கு குழந்தை திருமணமே நடைபெற வில்லை என்றார். தீட்சிதர்களின்  குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக பொய்யான குற்றச்சாட்டில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் ரவியும் விமர்சித்திருந்தார். மேலும் திருமணம் நடைபெறாத போது தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரு விரல் பரிசோதனை நடை பெற்றதாகவும் கூறியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு சமூக நல அமைப்பு கள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தில்லியிலிருந்து வந்திருந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையஉறுப்பினர் ஆனந்த், விசாரணை மேற்கொண்டார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“தீட்சிதர்களின் குழந்தை களுக்கு இருவிரல் பரி சோதனை நடை பெறவில்லை என்றும் குழந்தை திரு மணம் நடைபெறவில்லை என்றும் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி யதால் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச்செயலாளர் ராஜா கூறுகையில், “நடராஜர்கோவிலில் தீட்சி தர்கள் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்துவருகிறார்கள். தமிழ்நாடு  காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், ஆளுநர் இதனை மறைப்பதற்கு  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்” என்றார். குழந்தைகளை காவல்துறையினர் கட்டாயப்படுத் தியதால்தான் திருமணம் செய்து கொண்டதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பி னர் ஆனந்த் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும்  தெரி வித்தார். இந்த நிலையில் தீட்சிதர்கள் குழந்தை களுக்கு தொடர்ந்து குழந்தை திருமணம் செய்த வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.