tamilnadu

img

மொழிப்போர் தியாகிகளுக்கு முதல்வர் மரியாதை

சென்னை,ஜன.25- மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் மொழிப்போர் தியாகிகளின் மணி மண்டபம் உள்ளது. இங்கு 1939 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் மொழிப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மொழிப்போர் தியாகிகள் தினத்தை யொட்டி மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் செவ்வாயன்று(ஜன.25) தமிழக அரசு சார்பில் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களையும் மு.க.  ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சி யில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணி யன், ரகுபதி ஆகியோர் கலந்து கொண்ட னர். மேலும் அதிகாரிகள், மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரண மாக பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அங்குள்ள புகைப்படங் களை பார்வையிடவும் அனுமதிக்கப்பட வில்லை.