tamilnadu

img

பாஜக அரசியல் இங்கு எடுபடாது

சென்னை,ஏப்.12- அயோத்யா மண்டபம்  பிரச்சனை யில் அரசியலைப் புகுத்தி, அதன் மூல மாக பாஜகவை வளர்க்க வேண்டு மென்று நினைத்தால் அது நடக்காது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாச னுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பதிலளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று, சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனி வாசன் எழுப்பிய பிரச்சனைக்கு, குறுக்கிட்டு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“ பாஜக உறுப்பின ருக்கு ஒரு வேண்டுகோள். ஏழை  மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சனை களில் அதிகம் கவனம் செலுத்துங்கள். சாமானிய மக்களை பாதிக்கிற பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ்  சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே போகிறது.  அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியில் நீங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்” என்றார்.

“மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களிட மும் பிரதமரிடமும் வலியுறுத்தி வந்திருக் கிறேன். எனவே, பெற்றுத்தருவதற்கான முயற்சியில்  ஈடுபட வேண்டும். நம்மு டைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் நடக்க வேண்டும். தேவையில்லாமல், அயோத்யா பிரச்சனையில் அரசிய லைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது” என்றும் முத லமைச்சர் தெரிவித்தார்.

முறைகேடு

முன்னதாக  பாஜக உறுப்பின ருக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு,“ சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டில் ரமணி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தை ஆரம்பத்தில் நிர்வகித்து வந்த இராம சமாஜம் அமைப்பு பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக 1984 ஆம் ஆண்டிலிருந்து புகார் எழுந்தது” என்றார். இதனையடுத்து, தமிழக அரசு ஆணையின் படி, அயோத்யா மண்ட பத்தை 2013 ஆம் ஆண்டில் இந்து  சமய அறநிலையத்துறை தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்தது. அன்று முதல்  இன்று வரை மண்டபத்தினை அறநிலை யத்துறை நிர்வகித்து வருகிறது. அரசின் முடிவுக்கு எதிராக, இராம சமாஜம் அமைப்பின் தலைவர் வழக்கு தொடர்ந்ததால், இந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணை யர், துணை ஆணையர், மாம்பல பகுதியின் அறநிலையத்துறை தக்கார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில், கடந்த மாதம் அரசுக்கு சாதக மாக தீர்ப்பு வந்தது. மேலும், எதிர்த் தரப்பு வழக்கை நீதிமன்றம் ஒட்டுமொத்த மாக தள்ளுபடி செய்தது. தக்கார் நியமனமும் செல்லாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாஜகவின் அட்டூழியம்

தொடர்ந்து பேசிய அமைச்சர், “நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அந்த மண்டபத்திற்கு அறநிலையத்துறை அதி காரிகள் சென்ற போது, அங்கிருந்த பாஜகவின் மாநில நிர்வாகி தொண்டர் களுடன் மண்டபத்துக்கு பூட்டு போட்டார். மேலும், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்” என்றும்  அவர் கூறினார். மண்டபத்திற்குள் ராமர், சீதை,  ஆஞ்சநேயர் சிலைகளை வைத்து  அபிஷேகம், ஆராதணை செய்து வழி பாடு செய்ததாக வழக்கு விசார ணையின் போது  தெரிவித்துள்ளனர். தற்போது, அங்கு எந்த சிலையும் இல்லை என்கின்றனர் என்றும் அமைச்சர் புகார் கூறினார்.

கொள்ளைக் கூட்டம்

இந்த மண்டபத்தில் ஏசி வசதியுடன் கூடிய கருமகாரிய அறை, திருமண மண்டபம் உள்ளது. இங்கு ஓமம், கருமகாரியம் நடத்துவதற்கு ஒரு லட்சம்  முதல் வாடகை வசூலித்து பக்தர்கள் பணத்தை கொள்ளையடித்த கூட்டம்தான்  அங்குள்ள கூட்டம் என்றும்  அமைச்சர் குற்றம் சாட்டினார். திமுக அரசு இந்துக்களுக்கு  எதிராக செயல்படுகிறது என்ற மாயத்தோற்றத் தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது போன்றோரை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும். இது சட்டத்தின் படி நடக்கும் ஆட்சி என்றும் பாஜக வுக்கு எச்சரிக்கை  விடுத்தார்.