சென்னை, செப். 20- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று (செப்.20) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ் நாட்டின் புத்தொழில் சூழலை மேம்படுத் தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக் கிய “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023” வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 லட்சம் ரூபாய் பங்கு நிதி வழங் குவதற்கான ஒப்புதல் ஆணை களையும் வழங்கினார். இப்புதிய புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையானது, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும், அந்நிறுவனங் களின் விரிவாக்கத்திற்கு உறு துணையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறி யீடு மற்றும் சமூக மூலதனம் இரண்டிலும் அவற்றின் பங்களிப் புகளை அதிகரிப்பதற்கும் உந்து சக்தியாக இருக்கும். தற்போது “புத்தொழில்” என் பதற்கான வரையறை அம்சங்க ளுடன், பட்டியலினத்தவர், பழங் குடியின சமூகத்தினர், பிற துறை களில் ஏற்கனவே பயன் பாட்டில் உள்ள புதுமையான மாதிரிகளை பயன்படுத்தி தாங்கள் சார்ந்த சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒரு நிறுவனத்தினை உருவாக்கினால், அந்த நிறுவனம் புத்தொழில் என்று மாநில அர சால் அங்கீகரிக்கப்பட்ட பிற துணிகர முதலீட்டு நிறு வனங்களின் வழியாக முதலீடு செய்யும் பெரு நிதியம் ஒன்று ரூ.100 கோடி மதிப்பில் உரு வாக்கப்படும். இந்த பெரு நிதி யமானது வட்டார அளவில் செயல்படும் புத்தொழில் நிறுவ னங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறு வனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சிறப்புரிமை அளிக்கும்.
மாநிலத்தில் புத்தொழில் முனைவு மற்றும் முதலீட்டு பண் பாட்டினை பரவலாக்கும் விதமாக “ஸ்டார்ட் அப் தமிழா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக் கப்படும். தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பல்வேறு நிறுவனங் களிடமிருந்து நியாயமான விலை யில் பெறக் கூடிய வகையில் இத்தகைய தொகுப்பு அடங்கிய ஸ்டார்ட் அப் ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சார்ந்தவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகள், ஆலோச னைகள் மற்றும் வழிகாட்டல்களை அளிக்கும் சமூக நீதி தொழில் வளர் மையம் நிறுவப்படும். புத் தொழில் முனைவில் ஈடு படும் பெண்களின் பிரத்யேக தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஒரு தொழில் வளர் மையம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களால் உரு வாக்கப்படும் புத் தொழில் நிறுவன ங்களுக்கு ரூ.5 லட்சம் மானியம், டான்செட் திட்டத்தில் சிறப்புரிமை மற்றும் இலவச தொழில் வளர் காப்பான் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் (பொறுப்பு) அருண் ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவ ராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.