இருபுறமும் அமர்ந்திருந்த குழந்தைகளுடன் உரையாடினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இடதுபுறம் அமர்ந்த மாணவியிடம், என் பெயர் தெரியுமா எனக் கேட்க, ‘சிஎம்’ என்று அந்த மாணவி கூற, சிஎம் என்றால் பதவி, எனது பெயர் என்ன என்று மீண்டும் அவர் கேட்க, ஸ்டாலின் என அந்த மாணவி கூறியது, முதல்வரின் முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்தியது. வலதுபுறம் திரும்பினார். உன் பெயர் என்ன என்று மாணவனிடம் கேட்க, ஹரி என்றும் அப்பா பெயர் வீரக்குமார் என்றும் முதல் வகுப்பு படிப்பதாகவும் கூறினான். ‘ஸ்வீட் சாப்பிடு’ என்று சிறுவன் ஹரியிடம் அன்போடு கூறினார். முன்னாள் முதல்வர் கலைஞரின் சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்த நெகிழ்வான காட்சிகள்.