tamilnadu

img

பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மேல்மருவத்தூர், அக்.20- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உட லுக்கு தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெள்ளி யன்று (அக்.20) அஞ்சலி செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்தவர் பங்காரு அடி களார். பள்ளிக்கூட ஆசிரிய ராகப் பணியைத் தொடங் கியவர். ஆசிரியையாகப் பணியாற்றிய லட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பா.அன்பழ கன், பா.செந்தில்குமார் என இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 1970 ஆம் ஆண்டு முதல் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர். கடந்த ஓராண்டாகவே சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடி களார், தனது 83வது வயதில் அக்.19 அன்று மாரடைப்பால் காலமானார்.  அவரது வீட்டில் வைக்கப் பட்டிருந்த அவரது உட லுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அக்.20 அன்று அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி மற்றும்  மகன்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். அதன் பிறகு, அவரது  உடல் பொதுமக்கள் அஞ் சலிக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவி லில் உள்ள தியான மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  அமைச் சர்கள்,  பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி னர். மேலும் அவரது உட லுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மேல்மருத்துவத்தூர் கோயில் தியான மண்டபம் அருகிலேயே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமாதியில் அரசு மரியாதையுடன் அவரது  உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.  திக தலைவர் கி.வீர மணி, விசிக தலைவர் தொல்.  திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரி வித்து அறிக்கை வெளியிட் டுள்ளார்.