tamilnadu

img

கிராம கணக்குகளில் பட்டா மாறுதல்

சென்னை, அக்.18- கிராமக் கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை பயனாளி களுக்கு முதலமைச்சர். மு.க.ஸ்டா லின் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மறை மலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதல மைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்  சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக அரசு நிலங்க ளில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா  வழங்கப்பட்டது. இதை கிராமக் கணக்கில் உரிய மாறுதல் மேற் கொள்ளாமல்  இருந்தது. அதை சரி  செய்ய வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச் சர் அறிவுறுத்தினார். இதற்கிணங்க முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 8136, காஞ்சிபுரத்தில் 3949, திருவள்ளூரில் 4411 பட்டாக் கள் என மொத்தம் 16,496 பட்டாக்கள்  கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டு, அதற்கான பட்டாக் களை வழங்கிடும் அடையாளமாக 15 பயனாளிகளுக்கு கிராம கணக்கு களில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக் களை புதனன்று (அக்.18) முதல மைச்சர் வழங்கினார்.  மேலும், செங்கல்பட்டில் 3256, காஞ்சிபுரத்தில் 9, திருவள்ளூரில் 197  பட்டாக்கள் என மொத்தம் 3462 பட்டாக் கள் கிராமக் கணக்குகளில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இப்பணிகள் விரைவில் நிறைவு பெறும்.  இந்நிகழ்வின் போது, அமைச்சர் கள் கே.என். நேரு,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ.  அன்பரசன், ஆர். காந்தி, மா. சுப்பிர மணியன், தலைமைச் செயலாளர் சிவ்  தாஸ் மீனா, அரசு துறை செயலாளர்கள்,  துறை தலைவர்கள், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத், காஞ்சி புரம் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மரு.த.பிரபு சங்கர், சென்னை ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட னிருந்தனர்.

நீர்வழி புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல், மந்தைவெளி, மயானம், பாட்டை என வகைப்பாடு செய்யப் பட்ட அரசு நிலங்கள் அத்தகைய உப யோகத்தில் இல்லாமல் நத்தமாக உபயோகத்திலிருந்து அதில் பத்து  ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு அந்நிலங்கள் அரசின் உபயோகத்திற்கு தேவை இல்லை என்றால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு அந்த  நிலங்களை தணிக்கை செய்து உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானங் களை பெற்று தகுதியின் அடிப்படை யில் குடியிருப்புகளை வரன்முறைப் படுத்த தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது. மேலும், சென்னை புறநகர்ப் பகுதி,  நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் வீட்டுமனை ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட தடை ஆணை யும் ஒரு முறை மட்டுமே வரன்முறை செய்து வீட்டு மனை ஒப்படை வழங் கும் திட்டத்திற்கு முன்னர் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசாணைகளின் அடிப்படை யில், மாநிலம் முழுவதும் ஆட்சே பணை உள்ள மற்றும் ஆட்சேபணை யற்ற அரசு நிலங்களில் வீடுகள் கட்டி  பத்தாண்டுகளுக்கு மேலாக குடியிருப் போருக்கு வீட்டு மனை ஒப்படை வழங்க ஏதுவாக மாவட்ட ஆட்சித் தலை வருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் செயல்முறை ஆணை கள் வழங்கப்பட்டது வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.