tamilnadu

img

பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை, மார்ச் 12- பொதுத் தேர்வெழுதும் மாணவர் களுக்கு எந்தவித பயமும் தேவை யில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித் திருக்கிறார்கள். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி யில், “என் அன்பிற்குரிய 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் அனை வருக்கும் என் அன்பு வணக்கம். என்ன பரீட்சை கவலையில் இருக்கிறீர்களா? ஒரு கவலையும் வேண்டாம், எந்த பயமும் வேண்டாம்.  இது இன்னொரு பரீட்சை, அவ்வ ளவுதான். அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும். எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத் தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழு துங்கள். பொதுத் தேர்வு எழுதும் உங்க ளுக்கு தேவையானது எல்லாம் தன்னம் பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பதில்லை. உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டு போவது, உயர்த்தி விடுவது. எனவே, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.