சென்னை,ஜூலை 20- இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை அதிபர், 2022 ஆம் ஆண்டு பதவி யேற்றதற்குப் பிறகு முதன்முறையாக 2 நாள் பயணமாக தில்லி வரவுள்ளார். தமிழ்நாட்டிற் கும் இலங்கைக்கும் இடையில் பூகோள ரீதியான நெருக்கம் மற்றும் வரலாற்று, பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக நீண்ட காலமாக பல பிரச்சனைகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கை அதிபருடனான பேச்சு வார்த்தையின் போது, தமிழ் நாட்டு மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு முக்கிய பிரச்சனைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம் பரிய மீன்பிடி உரிமை களைப் பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்க ளின் நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்றி, அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாது காக்கப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் இந்தி யப் பிரதமர் பேசி, தீர்வு காணுமாறு கோரியுள்ளார். முதலமைச்சராக தான் பொறுப்பேற்றதற்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது கச்சத் தீவை மீட்க வேண்டும் எனத் தான் வைத்த வேண்டு கோளை நினைவுகூர்ந்த முதலமைச்சர், பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளுக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும், அத்துமீறி நுழைவதாக இலங்கைக் கடற்படையினர் குற்றம்சாட்டிக் கைது செய்து, துன்புறுத்தும் சூழல் உள்ளதாகவும், பாக் வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றா கும் எனத் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்டெடுக் கும் வகையில், ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந் தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகள் ஒன்றிய அரசு தொடங்க வேண்டும் என்று, பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலை நாட்டிடவும், மீனவர் களுக்கு நிரந்தர தீர்வு வழங்கிடும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் , இதுவரை அப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையாவது மீட்டெடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொண் டுள்ளார்.