சென்னை, ஜூன் 9- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆக.10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க 187 நாடுகளின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேரு ஸ்டே டியத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிர மாண்டமான தொடக்க விழாவை ஜூலை 28 ஆம தேதி இரவு 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
கடும் கட்டுப்பாடுகள்
186 நாடுகளை சேர்ந்த 2,500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் பகுதிகளில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற 37 ஓட்டல்க ளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. இந்த நிலையில் வீரர்களுக்கான உணவு, பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் குறித்து ஓட்டல் நிர்வா கிகள், சமையல் கலைஞர்களுடன், மருத்துவ, சுகாதார குழு தலைவர் மற்றும் சுகாதார முதன்மை செயலர் செந்தில்குமார், சுகாதார திட்ட இயக்குநர் உமா, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், உணவு பாதுகாப்பு அலு வலர் அனுராதா உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, வீரர்கள் தங்கும் 37 ஓட்டல்களிலும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை யோகா நடத்தப் பட வேண்டும். கொசு, பூச்சி தொல்லை கள் இல்லாமல் இருக்க வேண்டும். பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மற்றும் முழு உடல் பரிசோதனை செய்திருக்க வேண்டும். கண்டிப்பாக உணவுகளில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை திரும்ப பயன்படுத்த கூடாது. ஒவ்வொரு ஓட்டலிலும் 108 ஆம்பு லன்ஸ் தயாராக இருக்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். சுகாதாரம் சார்ந்த உதவிகளுக்கு உடனடியாக 104 என்ற நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தரவேண்டும். அனைத்து பணியாளர் களும் மருத்துவ காப்பீடு செய்வது அவசியம்” என்று அறிவுறுத்தினர்.