tamilnadu

img

செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் ஆலோசனை

சென்னை,ஜூலை 7-  44ஆவது செஸ் ஒலிம்பியாட் வரும்  ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 187 நாடுகள்  பதிவு செய்துள்ளதோடு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள்  பங்கேற்கின்றனர். அண்மையில் தலைமை செயலாளர் தலைமையி லான குழுவினர் போட்டி ஏற்பாடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில் வியாழனன்று (ஜூலை 7) சென்னை தலைமை செயல கத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலர்களுடன் ஆலோ சனை மேற்கொண்டார். இதில் வீரர்க ளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள், அதற்காக மாமல்ல புரத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தலைமை செயலா ளர் வெ.இறையன்பு, விளையாட்டுத் துறை செயலாளர் அபூர்வா, விளை யாட்டுத் துறை அலுவலர்கள், செஸ் ஒலிம்பியாட் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.