சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கின
சென்னை: நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கின. பிப்.15 அன்று தொடங்கிய 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 18 அன்றும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்.4 அன்றும் முடிவடைகிறது. சிபிஎஸ்இ வரலாற்றில் முதன் முறையாக 86 நாட்களுக்கு முன்னதாக பொதுத் தேர்வு அட்ட வணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் 40 நாட்களும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் சுமார் 2 மாதங்கள் வரையும் நடைபெறுகிறது.
பிரத்யேக ஜவுளிப்பூங்கா வேண்டும்
சென்னை: கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க குடியாத்தம் பகுதியில் பிரத்யேகமாக ஜவுளிப் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த மனுவில், குடி யாத்தம் பகுதி கைத்தறி நெசவாளர்களின் ஜவுளித் தொழில் களை ஊக்குவிக்க பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு ரூ.500 கோடியில் ஒரு மெகா ஒருங்கி ணைந்த ஜவுளிப் பகுதி, ஆடைப் பூங்காவை அமைத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மறு ஆய்வு செய்யப்படும்
மதுரை: மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க வேண்டாம் என்று ஆட்சியரிடம் மனு அளித்தால் மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள் ளார். கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க 120 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கூடுதலாக 1.5 லட்சம் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படும் என்று மதுரை யில் அமைச்சர் பேட்டி அளித்தார்.
மாற்றுத்திறன் பேராசிரியர் நியமனம்
சென்னை: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி யான பேராசிரியர் எஸ்.ஏழுமலை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த பதவியில் இந்திய சட்டக் கல்வி வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாற்றுத்திறன் கொண்ட பேராசிரியர் நிய மிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது.
சென்னையில் தீவிரவாதி கைது!
சென்னை: அசாம் மாநில சிறப்புப் படை போலீசார் “ஆப ரேஷன் பிரகத்” என்ற பெயரில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகை யில், அசாம் மாநில சிறப்பு படை அதிகாரிகள் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினருடன் இணைந்து, கடந்த புதனன்று அதிகாலை அல்கொய்தா தீவிரவாத குழுவின் முக்கிய நபரான ‘அபு சலாம் அலி’ என்பவரை சென்னை யில் கைது செய்தனர். செம்மஞ்சேரி போலீசார் உதவியுடன் இவரை கைது செய்தனர்.
இன்று வெயில் சுட்டெரிக்கும்
சென்னை: பிப்.16 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். பிப். 17 முதல் 19 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2-4 செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்திருக்கிறது.
சங்கு அறுக்கும் தொழிலுக்குச் சான்று
சென்னை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூரில் நடக்கும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று. இது குறித்து அமைச்சர், தங்கம் தென் னரசு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டைக் காலத்தில் அறம் போன்ற சிறு கருவிகளை கொண்டு சங்கினை அறுத்து அணிகலன்கள் செய்ததைக் குறிப்பிடுகிறது சீவக சிந்தாமணி பாடல். இந்த புதிய கண்டு பிடிப்பின் மூலம் இந்த பகுதியில் சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும், அப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியதையும் அறிந்துகொள்ள முடிகிறது” என தெரிவித்துள்ளார்.
தடை கோரி மனு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் மனு ஒன்றை சனிக்கிழமை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், “விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்திற் காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்தி வருகிறார். எனவே பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.