சென்னை,ஏப்.30- தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை, உணவு திருவிழா சனிக்கிழமை (ஏப்.29) தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெச வாளர்கள், கைவினைக் கலைஞர் கள் பயன்பெறும் வகையில் நடை பெற்றுவரும் சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப் பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெற்றுள்ளன. 20 வெளிமாநிலங் களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாள ர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற்றுள்ளன.
கைத்தறி ஆடைகள்
தமிழ்நாட்டின் கைத்தறி நெச வாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணி வகைகள், பட்டு சேலைகள், கோ –ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங் கங்களில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப் பட்டு உள்ளன. இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்பு களின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு கலை நயமும், பாரம்பரிய மும் கொண்டதாகும். தொன்மை வாய்ந்த துறைமுக நகரங்களை கொண்ட தமிழ்நாட்டில் வெளிநாடு களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட தற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆள்பாதி, ஆடைபாதி என்பது தமிழ்நாட்டின் பழ மொழிகளுள் ஒன்றாகும். இந்த பழ மொழி ஆடை நெய்யும் நெசவாளர் களின் புகழை தெரிவிப்பதாக உள்ளது. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளது. தற்போது நடைபெறும் திரு மணங்களில் பெண்களின் ஆடைகள் கைவினைக் கலைஞர்கள் மூலம் நூல் வேலைப்பாடுகள் ஆயிரக்கணக் கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப் படுவது கை வினைக் கலைஞர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்து வதாக உள்ளது.
கைத்தறி சேலைகள்
சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலைகள், பரமக் குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமுக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவிய ங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப் பட்ட கலை பொருட்கள், துணிப் பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற் பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராள மான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்
தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந் தோறும் 5-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்க ளுக்கு விருந்து படைத்து வருகின்றன. சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சென்னை விழா-கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா மே 14-ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். கண்களுக்கு விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சி களை கண்டு களித்து விட்டு, விதம் வித மாக சாப்பிட்டும் வரலாம். முன்னதாக இந்த திருவிழாவை மாநில அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, உதய நிதி ஸ்டாலின், மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.