சென்னை,ஏப்.25- சென்னை விமான நிலை யத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையம் ஏப்.25 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன்படி டாக்காவுக்கு முதல் விமானம் இயக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார். உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியிலிருந்து, 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாட்டின் முக்கிய கோயில்கள், கலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை ஓவியங்கள், காஞ்சி புரம் சேலைகள் உள்ளிட்ட வையும் காட்சிப்படுத்த ப்பட்டுள்ளன. இந்த புதிய முனையம் செவ்வாயன்று (ஏப்.25) முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன்படி புதிய முனையத்திலிருந்து வங்கதேசத் தலைநகர் டாக்காவுக்கு, யு.எஸ்., பங்களா விமானம் முதல் விமானமாக இயக்கப் பட்டது. இதன்படி, முதல் பயணிக்கு விமான நிலைய அதிகாரிகள், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்து போர்டிங் பாஸ் வழங்கினர். சென்னை விமான நிலையத்தில் தற்போது, 1,500 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். புதிய முனை யத்தில் கூடுதலாக 500 சிஐஎஸ்எப் வீரர்கள் பாது காப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.