மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டரில் வெள்ளியன்று மூத்தத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளையை சந்தித்து கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நலம் விசாரித்து உரையாடினார். உடன் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, தீக்கதிர் திருவனந்தபுரம் செய்தியாளர் ஜெயக்குமார்.
வழக்கை முடிக்க கெடு
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் வழக்கு விசாரணையை 6 மாதத்துக் குள் முடிக்க, திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலை விவ காரத்தில் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிச்சந்திரனை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அநாகரிகமான மனிதர்
சென்னை: “தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டும ல்ல, அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூ பித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளி யில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார்” என காங்கிரஸ் எம்.பி., சுதா சாடியுள்ளார்.
காவலாளிக்கு ஜாமீன்
சென்னை: சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது ஏற்பட்ட தகராறில், சம்மனை கிழித்து பணி செய்ய விடாமல் தடுத்த தாக பதியப்பட்ட வழக்கில், சீமான் வீட்டின் காவலாளிகள் அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோர் மீது இரண்டு வழக்கு கள் பதிவு செய்து, காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்க சோழிங்க நல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த வாரம் அறிக்கை
சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்திருக்கும் பாலி யல் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்.28 அன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது, காவல்துறையினர் அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி னர். இந்த விசாரணை தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீமானை கண்டிக்க வேண்டும்
சென்னை: பெண்கள் குறித்து சீமான் ஆபாசமாக பேசி யது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., ‘பெண்களை இழிவாக பேசுவதை கேட்டு எப்படி அந்த கட்சியில் பெண்கள் இருக்கிறார்கள். அவரது வீட்டில் உள்ள பெண்களும் நாதக-வில் உள்ள பெண்களும் கண்டிக்க வேண்டும்’ என்றார்.
ட்ரோன் மூலம் மீட்கலாம்!
நாகை: தனியார் ட்ரோன் உற்பத்தி நிறுவனம் (யாளி ஏரோஸ்பேஸ்) கடலில் மாயமாகும் மீனவர்களை ட்ரோன் மூலம் மீட்கும் பணியை நாகை பகுதியில் மேற்கொள்ள உள்ளது. இதற்காக நாகை மாவட்ட ஆட்சியருடன், அந்நிறு வனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கடலில் 100 கி.மீ. தொலைவுக்கு இந்த அதிநவீன ட்ரோன் மூலம் கண்கா ணித்து, மீனவர்களை மீட்க உதவும். கடல் வழிப் போக்கு வரத்து கண்காணிப்பு, சட்ட விரோத நடவடிக்கைகள் கண்கா ணிப்பு போன்றவற்றுக்கும் இந்த ட்ரோனை பயன்படுத்த முடியும் என தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுமலை எஸ்டேட்டில் ஆய்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார். கேரளாவைச் சேர்ந்த சிபு என்ற இளைஞரின் உடல் தனியார் எஸ்டேட்டில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் அருகில் இருந்து வெடிபொருட் களும் மீட்கப்பட்டன. இதனால், சிறுமலை தனியார் எஸ்டேட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வரு கின்றனர்.
அதிகரிக்கும் மாரடைப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் ஒரு வாரத்தில் 174 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் இதய நோய் காரண மாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்படு வது அதிகரிக்கிறது.