சென்னை, செப். 5 - அறநிலையத் துறையில் காலியாக 60 விழுக்காடு காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக நிரப்பக் கோரி செவ்வாயன்று (செப்.5) ஆணையர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. பதவி உயர்வு, பணி மாறுதல்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும், ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வந்த சங்க அலுவலக இடத்தை மீண்டும் வழங்க வேண்டும், வெளி முகமை மூலம் பணிய மர்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை அலுவ லர் சங்கம் நடத்திய இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவ தும் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய சங்கத்தின் தலை வர் தெ.வாசுகி, “நடப்பு நிதியாண் டில் சட்டமன்றத்தில் அமைச்சர் 259 அறிவிப்புகளை வெளியிட் டார். துறையின் சார்பில் 6 ஆயி ரம் கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. காலிப் பணியிடங்களை நிரப்பாததால் ஒரு ஊழியர் 4 பேரின் வேலையை கூடுதலாக செய்ய வேண்டி உள்ளது. விடு முறை நாட்களிலும் பணியாற்றும் சூழல் உள்ளது. காலிப் பணி யிடங்களை காரணம் காட்டி பதவி உயர்வு, பணி மாறுதல் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும். காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும்” என்றார். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்க டேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநிலச் செயலா ளர் சுமதி, அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.சு.பால்ராஜ், பொருளாளர் வெ.பாலமுருகன் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து ஆணையரை சந்தித்து முறை யீடு செய்தனர்.