tamilnadu

img

காமன்வெல்த் தொடரில் மழை விளையாட வாய்ப்பு?

22-வது காமன்வெல்த் விளை யாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரான பிர்மிங்ஹாம் நகரில் வெள்ளியன்று தொடங்கியது.  ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடை பெறும் இந்த தொடரில் பங்கேற்க மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த 5,000 மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் இங்கிலாந்து நாட்டிற்கு வந்துள்ளனர்.  20 விளையாட்டுகளில் மொத்தம் 280 போட்டிகள் (உட்பிரிவுகள்) நடத்தப்பட உள்ள நிலையில், இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் வானிலை கணிப்பு இல்லாத பகுதியில் ஒன்றான இங்கிலாந்து நாட்டில் நடை பெறும் காமன்வெல்த் தொடர் மழை யால் பாதிக்கப்படுமா என்ற கேள்வி தான் அதிகம் எழுந்து வருகிறது.  ஆனால் உண்மையில் வானிலை அறிக்கையின்படி 2-வது நாள் முதல் அதாவது சனி அல்லது ஞாயிறன்று முதல் காமன்வெல்த் தொடர் நடை பெறும் பிர்மிங்ஹாம் நகர் லேசான  முதல் மிதமான அளவில் கனமழையை எதிர்கொள்ளும் என அறிவிக்கப் பட்டுள்ளது.  மழையால் நீச்சல், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச் சண்டை, மல்யுத்தம், ஸ்குவாஷ் ஆகிய உள்ளரங்கு போட்டிகள் தப்பிக்கும். ஆனால் ஹாக்கி, கிரிக்கெட், தடகளம் உள்ளிட்ட போட்டிகள் மழையால் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.  இதனால் 22-வது காமன்வெல்த் தொடரில் வீரர் - வீராங்கனைகளுக்கு பதிலாக மழை விளையாட அதிக வாய்ப்புள்ளது என தெரிகிறது.