சென்னை, நவ. 28- தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 29) முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.