சென்னை, டிச. 18- தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பி ருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த மூன்று நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இத னால் திங்கட்கிழமை (டிச. 19) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கா லில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய் ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரைவானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்க ளில் லேசான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதி கள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதி களில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதி களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது.