tamilnadu

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி கோயம் புத்தூர், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும்  திண்டுக்கல் மாவட்டங்களிலும், ஏப்ரல் 3- ஆம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும்  மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.  இதனால், மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய  தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப். 2 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக் கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 3 அன்று  தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  ஏப். 4 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஏப்.5 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.