tamilnadu

img

அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, நவ.2- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக (நவ.3) அன்று தமிழ்நாடு, புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக் கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வியாழனன்று (நவ.3) தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை,  மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன  முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி,  தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளன. நவம்பர் 4 முதல் 6 ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும் என்றும் கன்னி யாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக் கல், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருக்கிறது.