தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
அரியலூர், ஜுன் 24- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், கடனுதவி பெற்று, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் “முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்” மூலம் தற்காலிக வங்கிகடன் அனுமதி பெற்ற அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களை ஒருங்கிணைந்து அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் கைம்பெண்கள் 25 நபர்களுக்கு, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கடந்த ஜுன் 9 ஆம் தேதி முதல், 19 ஆம் தேதி வரையிலான நாட்களில் நடைபெற்றது. இத்தொழில், முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழினை மாவட்ட ஆட்சியர் திங்களன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கலையரசி காந்திமதி, மாவட்ட திட்ட மேலாளர் ராம்குமார், மாவட்ட திட்ட மேலாளர் பிரவின் மற்றும் இதர அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.