வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரள மாநிலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக சனிக்கிழமையன்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்ற துவக்க விழா வைக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வைக்கம் சென்றுள்ளார். முன்னதாக, அவர் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கட்சியின் வைக்கம் தலையோழ பிரம்பு ஏரியா குழு செயலாளர் செல்வராஜ், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி கோபால் சங்கர், கோவை மாவட்டக் குழு அலுவலக கட்சி கிளைச் செயலாளர் ஆனந்தன், கோவை கிழக்கு நகரக்குழு உறுப்பினர் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.