ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டியில் வைக்கப்பட்டியிருந்த தோழர் என்.கே.நடராஜன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வணக்கம் செலுத்தினார்.
சென்னை,டிச.11- சிபிஐ(எம்-எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் (67), திண்டுக்கல் நகரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.
தோழர் என்.கே.நடராஜன், கல்லூரி காலத்திலேயே மார்க்சியத்தின்பால் ஈடுபாட்டுடன் இருந்தவர். சாருமஜூம்தார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு தன்னை சிபிஐ(எம்-எல்) விடுதலை கட்சியில் இணைத்துக் கொண்டவர். 1980 களில் கட்சியின் முழுநேர ஊழியராக ஆன அவர், நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்க ளுக்காக போராடியவர். கோவை மாவட்ட ஆலைத் தொழிலாளர்களையும் மற்றும் குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதி களில் உள்ள விசைத்தறி தொழி லாளர்களையும் ஒருங்கிணைத்து சங்க மாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். 2019 இல் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், 2022 இல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் மீண்டும் செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இடதுசாரி ஒற்றுமையை கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர். இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கூட்டு இயக்கங்கள் நடத்துகிற பொழுது, தவறாமல் அதற்கான கூட்டங் களில் கலந்து கொள்வதுடன், மாநிலம் முழு வதும் அவரது கட்சித் தோழர்களை கலந்து கொள்ளச் செய்வார். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரது இழப்பால் வாடும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கட்சித் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
அஞ்சலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழர் என்.கே.நட ராஜன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.