சென்னை, பிப்.23- தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற்றது. தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்க ளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி யாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது. சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணையின்போது, பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகி கள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தையடுத்து, இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
வழக்கு மீதான விசாரணை 2 ஆண்டுக ளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதனன்று தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2019 ஜூன்மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல இருப்பதால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென கோரி நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செல்ல ஏதுவாக, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை மூன்று வாரங்களுக்கு அறிவிக்கக் கூடாது என தேர்தல் அதிகாரிக்கு உத்தர விட்டனர். 2019 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.