மதுரை:
சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணிகள் நிரப்புதல் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு கொரோனா பரவல் அதிகளவில் உள்ளதால் அதிகக்கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு சத்துணவு பணியாளர்கள் தேர்வை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்துள்ளார்.
சத்துணவு பணியாளர் நியமன தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜாகூறியதாவது:-சத்துணவில் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. கடந்த 2017- ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு பணியாணை 2019-ஆம் ஆண்டு தான் ஏற்பாடு செய்யப்பட்டது. சில அரசியல் கட்சிகளின் அழுத்தம் கார
ணமாக அது நிறுத்தி வைக்கப் பட்டது மீண்டும் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக தமிழக அரசுஅறிவித்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த நிலையில் கொரோனா பரவலைக் காரணம்காட்டி நேர்முகத் தேர்வைதமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது விண்ணப்பித்தவர் களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை நிரப்புவதற்கு தமிழக அரசு முன்வருவதில்லை. பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்
பது அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை மட்டுமே செய்து வருகிறது. இது அரசுப் பணியில்இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவைத் தடுக்கும் ஒரு செயலாகவும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாகவும் உள்ளது.
நீட் தேர்வு, குடிமைப்பணித் தேர்வு, அரசியல் கட்சி கூட்டங் கள், ஆளும்கட்சிக் கூட்டங்கள் நடத்துவது நடக்கிறது. சத்துணவுப் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை காலத்திற்கு காத்திருப்பார்கள். தமிழக அரசுநேர் முகத் தேர்வை பாதுகாப்புடன் நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.