ஒட்டாவா, நவ. 8 - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான நேர்காணலை ஒளிபரப்பியதற்காக ‘ஆஸ்திரேலியா டுடே’ ஊடகத்துக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ‘ஆஸ்திரேலியா டுடே’ ஊடகமும், நங்கள் பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் எங்களது செயல்பாடு களை தொடர்வோம் என தெரிவித்துள் ளது. “மக்களிடம் சொல்ல வேண்டிய செய்தி களை சொல்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எத்தனை தடை வந்தாலும் நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் தான் உறுதியாக நிற்போம். பத்திரிகை சுதந்தி ரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டக் கூடிய வகையில் எங்களுக்கு இந்நே ரத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் நாங்கள் செயல்படுவோம்” என்று ‘ஆஸ்திரேலியா டுடே’ ஊடக நிறுவனத்தின் நிர்வாக ஆசிரி யர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறியுள் ளார். ஆஸ்திரேலியாவில் இந்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அதில் இந்தியா - கனடா இடையேயான உறவு கள் குறித்தும், கனடாவில் உள்ள காலிஸ் தான் இயக்கம் குறித்தும் கேள்விகள் கேட்கப் பட்டது. அந்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கனடா குற்றச்சாட்டு வைப்பதாகவும், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதி காரிகள் கண்காணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டி ருந்தார். ஆஸ்திரேலியா டுடே இந்த நேர்காணலை ஒளிபரப்பியது. இதற் காகவே, கனடா அரசு அந்த ஊடகத்தைத் தடை செய்துள்ளது. இந்திய தூதரக சேவை முகாம்கள் ரத்து! கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் இந்திய ஒன்றிய அரசு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை தொடா்புப்படுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா சுமத்தி வருகிறது. இதை இந்தியா மறுத்து வரும் சூழலில் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மேலும் மேலும் மோசடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய துணைத் தூதரகம் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், ‘மக்களின் தேவை களைப் பூா்த்தி செய்யும் முகாம்களை நடத்துபவா்களுக்கு குறைந்தபட்ச பாது காப்பைக் கூட கனடா பாதுகாப்பு அதிகாரி களால் தர இயலாது என்பதை அண்மை யில் நிகழ்ந்த சம்பவம் தெளிவாக்கி யுள்ளது. இதனால் இந்திய துணைத் தூத ரகம் சாா்பில் ஏற்கெனவே திட்டமிடப் பட்டிருந்த சேவை முகாம்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன’ என அறிவித்துள்ளது.