tamilnadu

img

உணர்வாலும் உதிரத்தாலும்! - கே.சாமுவேல்ராஜ்,

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகமான கோ.பாரதிமோகன் நினைவ கத்தை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அவர்களும் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களும்  இன்று (அக்.21) திறந்து வைக்க இருக்கி றார்கள்.

கட்சி அலுவலகம் என்பது...

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல.கட்சியைக் கட்டுவ தற்கான கருவிகளில் ஒன்று. அந்த கட்டிடமும்,  கட்சியும் ஒரு அரசியல் இயக்கத்திற்கு மட்டும்  சொந்தமானதல்ல.அது உழைக்கும் மக்க ளுக்கு சொந்தமானது. ஏக்கப் பெருமூச்சோடு வருகிறவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிற இடம். ஒட்டச் சுரண்டப்படுகிற உழைக்கும் மக்களின் உரிமைக்குரல். அறிவை, அறிவியலை, புதுமையை, மாற்றத்தை நேசிப்பவர்களின் உலைக்களம். மனிதர்கள் தொலைத்து விட்ட மனிதாபி மானம் குவிந்திருக்கிற கூடாரம். விவாதமொன்றில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கி வந்த  நூல கம் ஒன்றை பொது இடத்திற்கு மாற்ற வேண்டும்  என்று கருத்து தெரிவிக்கப் பட்டபோது பேரா சிரியர் ச.மாடசாமி அடுத்த நொடியிலேயே “கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விட மேலான பொது இடம் எது” என்றார். மெய் தானே இது!

தஞ்சைத் தரணிக்கு தனித்த இடம்

அதுவும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்  இயங்கி வருகிற கட்சியின் அலுவலகங்க ளுக்கு வரலாற்றில் தனித்த இடம் உண்டு. எங்கே அடிமைத்தனமும், கொடூரமான சுரண்டலும் இருக்கிறதோ அங்கே தான் செங்கொடியின் தேவையும் அதிகமிருக்கிறது. இயற்கையின் வளங்களான நிலத்தையும், நீரையும் அபகரித்து, ஆக்கிரமித்து பெரும் ஆதிக்க சக்திகளாக மடாதிபதிகளும் ஜமீன் தார்களும், நில உடமையாளர்களும் சர்க்காரை யும் தனக்கு கீழ் வைத்து கோலோச்சிய பகுதியே தஞ்சை தரணி.

தாய்ப்பாலில் விளைந்த நெல்மணிகள்

காவிரியின் தீரத்தில் இருப்பதாலயே “சோழ நாடு சோறுடைத்து”என்று காவியங்கள்  புகழாரம் சூட்டின.ஆனால் உழைக்கும் மக்க ளின் வரலாற்றிலோ இதற்கு வேறு பெயர் உண்டு. “ஆண்டைகளே உங்கள் நெல்மணி கள் காவிரி நீரால் மட்டும் விளையவில்லை, எங்கள் பெண்களின் தாய்ப்பாலிலும் விளைந் தது என்று காலத்தால் அழிக்க முடியாத வரிகளை  எங்கள் நவகவி எழுதி வைத்துள்ளார். ஆண்டைகளின் வயல் வேலைக்கு செல்கிற பெண்கள் பால் குடிக்கிற கைக்குழந் தைகளை மட்டுமே எடுத்து வர முடியும்.அங்கே  மரங்களில் தொட்டில்கள் கட்டி குழந்தைகளை அதில் போட்டுவிட்டு வயலில் இறங்கிட வேண்டும். குழந்தை பசிதாங்காமல் அழு தாலோ, தாய்க்கு மடி கனத்து வலி ஏற்பட்டாலோ  பண்ணையாட்களின் அனுமதியின்றி  பிள்ளைக்கு பால் தர முடியாது. மடிகனத்து மார் வலி எடுத்தால் வயலில் நீரோடு தாய்ப்பாலை  பீய்ச்சி விடுவதைத் தவிர வேறு வழியில்லை. அழுகிற பிள்ளைக்கு கரையேறி பால் கொடுக்கும் உரிமை வேண்டும் என்கிற முழக்கம் தஞ்சைத் தரணியை தவிர உலக வர லாற்றில் எங்கும் கேட்டிருக்க முடியாது. அவ்வாறு  முழங்கியவர்களின் கையில் இருந்ததோ உதிரச் செங்கொடி.

நிலக் குவியலும் கொடுமைகளும்

நில உடமையின் கொடுமை என்றால் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது.  அந்த அளவிற்கு நிலக்குவியலும், அதற்கே உரிய கொடுமையும் ஒன்றாய் இந்த மண்ணோடு கலந்திருந்தது. 1805 ஆம் ஆண்டு கீழத் தஞ்சையில் நடத்தப் பட்ட நில உடமை குறித்த ஆய்வு பின்வரு மாறு தெரிவிக்கிறது: “மொத்தம் 5783 கிராமங்கள் இருந்தன. அதில் நிலம் கூட்டு உடமையாக இருந்தது. 1774  கிராமங்கள். பண்ணையார்களின் உடமையாக  இருந்தது 2202 கிராமங்கள். பண்ணையார்க ளின் கூட்டு உடமையாக இருந்தது 1707 கிரா மங்கள். தனி உடமையாக இருந்தது 1807 கிரா மங்கள் ஆகும். இந்த விபரங்களைக் கொண்டு  நிலக்குவியலின் அளவை உணர்ந்து கொள்வது கடினமல்ல. இதன் ஆதிக்கம் எவ்வாறு  இருந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்வ தும் கடினமானதல்ல.

மனித உருவிலே பிறந்திருந்தாலும் 

1949 ஆம் ஆண்டு பிரபல காங்கிரஸ் தலை வர் ஜே.சி.குமரப்பா தலைமையில் அமைக்கப் பட்ட நிலவுடமை பற்றிய கமிட்டி தனது அறிக் கையில் பின்வருமாறு தெரிவிக்கிறது: “தேவையான அளவு மழை பெய்து கொண்டிருந்தாலும், அரை வயிற்றுப் பட்டி னியோடு போதுமான ஆடைகள் இன்றி,  எங்கள் குழுவினரை பார்த்து தரையில் படுத்து உருண்டு, ‘எங்களை காப்பாற்றுங்கள்’ என்று  கதறிய ஏராளமான மக்களை எல்லா கிரா மங்களிலும் பார்க்க முடிந்தது”. மேனாள் ஆட்சிப்பணி அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் குறிப்பிடுவதைப் போல், “மழை பெய்தவுடன் அல்லது நீர் வந்தவுடன் வய லில் இறங்க வேண்டிய ஒரு ரிசர்வ் பட்டாளமே  இந்த பண்ணையடிமைகள். எனவே உயிர்  பிழைத்திருப்பதற்கு மட்டுமே ஏதாவது உண்ணக் கொடுக்கப்பட்டது. ஏனெனில் இவர்களில் பெரும் பகுதியினர் நிலமற்ற வர்கள் மட்டுமல்ல,சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட வர்கள். பண்ணையார்களைப் பொறுத்தவரை இவர்கள் மனிதர்கள் அல்ல. தனக்காக உழைக்க மட்டுமே படைக்கப்பட்ட விலங்குகள். அவர்களின் பண்ணைகளில் உள்ள ஆடு, மாடுகளைப் போல் மனித உரு வில் பிறந்த விலங்குகள். அதில் ஏதாவது பிசகு ஏற்பட்டதாகக் கருதினால் புளிய விளார்  உடலில் கோடுகள் கிழிக்கும். தொடர்ந்து கூர்முனையான கூழாங்கல் செறுகப்பட்ட சவுக்கு உடலை ரணமாக்கும். எல்லா வற்றிற்கும் மேலாக ஒரு மொடா சாணிப் பாலை வாயில் ஊற்றுவார்கள். வயிறு புடைத்து நடுவீதியில் தவளை போல் கிடக்கச்  செய்வார்கள்.

இடியென முழங்கியது...

காற்றுக்கூட புக முடியாத ஆண்டைகளின் இந்த ராஜ்ஜியத்தில் தான் இடியென முழுங்கியது அந்த பேரோசை. “சங்கமாக ஒன்றுபடு! சளைக்காமல் போராடு! சாணி பால் குடிக்க மறு! அடித்தால் திருப்பி அடி!” கர்நாடகத்திலிருந்து காவிரியோடு புறப்பட்டு வந்த பி.சீனிவாசராவ் எனும் முன்னத்தி ஏர் மனித மனங்களை உழுதது. அத னால் சேற்றில் நெல்மணிகளை மட்டுமல்ல; செங்கொடிகளையும் மக்கள் நட்டு வைத்தார் கள். ஆதிக்க சக்திகள் அதிர்ந்தன. பண்ணை  அடிமைகள் விவசாயக் கூலிகள் என்கிற அரசி யல் சொல்லால் இப்போது அழைக்கப்பட்ட னர். பி.எஸ்.தனுஷ்கோடி, மணலி கந்தசாமி, தஞ்சை என். வெங்கடாசலம், களப்பால் குப்பு சாமி, ஏ.எம்.கோபு, கோ.பாரதிமோகன், கே. ஆர்.ஞானசம்பந்தம், கோ.வீரய்யன் என எண்ணற்ற படைத்தளபதிகள் வயல் வெளி கள் எங்கும் கால் பாவி நின்றார்கள். அவர்கள்  நடந்தால் கீழத் தஞ்சை உடன் நடந்தது. அவர்கள் கை உயர்த்தினால் அனைத்தும்  நின்றன. இதனை எதிர் கொள்ள முடியாத கோழை கள் தான் 1968 டிசம்பர் 25 அன்று இராமையா வின் குடிசைக்கு தீ வைத்தார்கள். 18 குடும் பங்களைச் சார்ந்த 44 பேர் வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் குரல் இன்றும் தஞ்சைத் தரணியெங்கும் ஒலிக்கிறது. மகத்தான தலைவர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிடுவதைப் போல் வெண்மணியில் விவ சாயத் தொழிலாளர்கள் உயர்த்திப் பிடித்த சமூக-பொருளாதாரப் பிரச்சினைகள் இன்றைக் கும் நீடிக்கின்றன.வரலாற்றில் இதனை நேர்  செய்வதே வெண்மணி தியாகிகளுக்கு மெய் யான வீரவணக்கமாகும்.

தோழர் பாரதிமோகன் நினைவாக...'

இதற்காகவே நமக்கு அலுவலகம் அவ சியமாகிறது. நமது கட்டமைப்புகளில் ஒன்று  அலுவலகம். அமைப்பு ரீதியான செயல்பாடு களுக்கும்,கூட்டாக முடிவுகள் மேற்கொள்ளப் படுவதற்கும் அலுவலகமும் பங்காற்றுகிறது. அதனால் தான் கட்சியைக் கட்டுவதன் ஒரு  பகுதியாக அலுவலகத்தையும் கட்டுகிறோம். இது செங்கல்,சிமெண்டால் மட்டும் கட்டப்படு கிற கட்டிடம் அல்ல. உணர்வாலும், உதிரத்தா லும் கட்டப்படுவது.  அவ்வாறே மயிலாடுதுறை மாவட்டத் தோ ழர்கள் தங்கள் உயிரோடு கலந்த ஓவியமாக இந்த கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள்.  அதுவும் இது தோழர் கோ.பாரதிமோகன் அவர்களின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கட்டிடம். கட்சியின் மாவட்டச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, தொழிற்சங்க தலை வராக, விவசாயிகளின் தலைவராக, இலக்கிய  ஆர்வலராக செயல்பட்ட மகத்தான தலைவர்  அவர்.அவரது இணையர் தோழர் குஞ்சிதம்  பாரதிமோகன் தமிழ்நாடு மாதர் இயக்கத் தின் முன்னோடிகளில்டி ஒருவராக செயல்பட்ட வர். ஆறு ஆண்டுகள் மக்களின் நல்வாழ்விற் காக சிறை வாழ்க்கை, இரண்டு ஆண்டுகள் தலைமறைவு தியாக வாழ்க்கை என மக்களின்  இதயத்தில் அமர்ந்திருக்கிற கோ.பாரதி மோகன் என்கிற அன்புத் தலைவரின் பெய ரால் அவரின் விழுதுகள் எழுப்பியிருக்கிற நினைவு இல்லம் அவரது எண்ணங்களை ஈடேற்றும். அவரது சக தோழரான கே.ஆர்.ஞான சம்பந்தம் அவர்களின் இணையர் தோழர் வேதவள்ளி அவர்களை கட்டிடம் தொடர்பாக சந்தித்து விட்டு விடைபெறுகிற போது வாசல் வரை வந்து வழியனுப்பினார். முஷ்டியை உயர்த்தி செங்கொடி வாழ்க என்றார்.இன்னும்  அந்த வார்த்தை காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.