tamilnadu

img

ரூ.50ஆயிரத்திற்கு கீழான வணிகவரி தள்ளுபடி!

இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை

முதல்வர் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (அக்.10) கேள்வி நேரத்திற்கு பிறகு, நீண்ட கால சிறைவாசிகளின் முன் விடு தலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி கே. பழனிசாமி  கு. செல்வப்பெருந்தகை, சிந்தனைச் செல்வன், எம். சின்னத்துரை, டி.ராமச் சந்திரன், ஜி.கே. மணி, பூமிநாதன், எம்.எச். ஜவாஹிருல்லா, ஜெகன் மூர்த்தி ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்தனர். இதற்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில ளிக்கையில் கூறியது வருமாறு:-இந்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கி றோம்.  தமிழ்நாடு சிறையில் 10 ஆண்டு களுக்கு மேல் உள்ள வயது முதிர்ந்த, தீராத நோயுற்ற, மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் தொடர்பாக நீதிபதி ஆதி நாதன் தலைமையிலான குழு  22.12.2022 அன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் முன் விடுதலைக்கு 262 பேர் பரிந்துரைத்தனர். ஆளுநர் உத்தரவு பிறப்பித்தவுடன் அனைத்து சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள். அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி 332 கைதிகள் இதுவரை முன் விடுதலை செய்யப்பட்ட னர். இவர்களில் 9 சிறைவாசிகள் இஸ்லாமியர்கள்.

சென்னை, அக். 10 - ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த  வேண்டிய வணிகர்களுக்கு, அந்த நிலு வைத் தொகையானது முற்றிலும் தள்ளு படி செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்துள்ளார். அதேபோல, ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20 சதவிகித வரியை செலுத்தினால் போதும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள வணிகர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி நிலு வைத் தொகையை வசூலிக்க, புதிதாக சமாதான திட்டம் ஒன்றை, அவை விதி 110-இன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று அறிமுகம் செய்தார்.  அப்போதுதான் இந்த வரித் தள்ளு படி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், “அரசின் இந்த முடிவால் 1 லட்சத்து 40  ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப் பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணி கர்கள் பயனடைவார்கள்” என்று தெரி வித்தார்.

அவை விதி 110-இன் கீழ் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக் கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் செவ்வாயன்று (அக்.10) காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.  இதனைத் தொடர்ந்து 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின், வணிகர்கள் மற்றும் நிறுவனங்களுக் கான வணிக வரி நிலுவைத் தொகை குறித்த புதிய சமாதான திட்டத்தை அறிவித்து, உரையாற்றினார்.  வரி நிலுவை  ரூ. 25 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு, வணிகர்கள் செலுத்த  வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடர் பாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 607 கேட்பு  வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணி க்கை, 1 லட்சத்து 42 ஆயிரத்து 569. இந்த  வழக்குகள் மூலமாக நிலுவையாக இருக்கும் தொகை 25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்கு வருவாய் இழப்பு

இவ்வாறு மிக அதிக எண்ணிக்கை யில், வழக்குகள் நிலுவையில் உள்ள தால், வணிக வரித்துறையின் பணிச்சுமை அதிகரிப்பதோடு, நமது வணிகர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்ற னர். தமிழக அரசுக்கு வரவேண்டிய வரு வாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மை யான வழக்குகள், தமிழ்நாடு வணிக வரிச்  சட்டம் மற்றும் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலுவை யில் உள்ள வழக்குகள் ஆகும். இந்த பிரச்சனைக்கு முடிவு காணப் பட வேண்டும் என்ற கோரிக்கையை வணி கர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து, இத்தகைய பழைய நிலுவைத் தொகைகளை வசூ லிப்பதில், ஒரு சமாதான திட்டத்தை அறி வித்து செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

கூடுதல் சலுகைத் திட்டம்

கடந்த ஆண்டுகளில், இந்த நிலுவைத் தொகைகள் குறித்து பல சமாதான திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், புதியதோர் அணுகுமுறையோடும், கூடுதல் சலுகையோடும், இந்த திட்டம் இப்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50 ஆயிரத்திற்கும் குறை வாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டிலும், ரூ. 50 ஆயிரத்திற்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். தமிழகத்தின் வரலாற்றில் சிறு வணி கர்களுக்கு இவ்வாறு முழுமையாக வரி நிலுவைத் தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல்முறை. அரசின் இந்த  முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398  வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயி ரத்து 602 சிறு வணிகர்கள் நிலுவைத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைவார்கள்.

இதர வணிகர்களுக்கும் சலுகை

இப்படி, நிலுவைத் தொகை தள்ளு படி செய்யப்பட்ட வணிகர்கள் தவிர, இதர வணிகர்கள் மற்றும் நிறுவனங்களும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை வரி  நிலுவையில் உள்ளவர்கள், ரூ. 1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை வரி நிலுவை யில் உள்ளவர்கள், ரூ. 10 கோடிக்கும் மேலாக நிலுவையில் உள்ளவர்கள், என நான்கு வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவர். மேற்கூறிய நான்கு வரம்பில் முதல் வரம்பில் உள்ளவர்கள், மொத்த நிலுவைத் தொகையில், 20 விழுக்காட்டைக் கட்டி நிலுவை வழக்கு களில் இருந்து வெளிவரலாம். அல்லது நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் ஒரு குறிப் பிட்ட விழுக்காடு தொகையைக் கட்டி  நிலுவை வழக்குகளில் இருந்து வெளி வரலாம்.

வட்டித் தொகையும் தள்ளுபடி

இவர்களில் வரி விலக்கை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும், வரி விதிப்பை ஏற்றுக்கொள்ளாமல் மேல்முறையீடு செய்திருப்பவர்களுக்கும் என தனித்தனி யாக நடைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மேலும் ஒரு முக்கிய சலுகையாக, நிலுவைத் தொகை யினை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரை, அவர்களது கணக்கில் ஏற்றப்பட ஏதுவான திரண்ட வட்டித் தொகையும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். தமிழக வணிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம் வரும் 16.10.2023 முதல் நடைமுறைக்கு வரும். நான்கு மாத காலம் நடைமுறையில் இருக்கும். அதா வது, 2024 பிப்ரவரி 15 வரை, இந்த சமா தான திட்டம் நடைமுறையில்இருக்கும்”. இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.