ஏனநல்லூர் கிராமத்திற்கு பேருந்து சேவை
உயர் கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
கும்பகோணம், ஏப்.28- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏனநல்லூர் கிராமத்திற்கு பேருந்து சேவையை, திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் பொது மேலாளர் த.முத்துக்குமாரசாமி, துணை மேலாளர் (வணிகம்) ராஜேஷ், கும்பகோணம்-2 கிளை மேலாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் ராஜா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.