சென்னை, ஜூலை 31 - 15 விழுக்காடு ஓய்வூதிய உயர்வு கோரி திங்களன்று (ஜூலை 31) சென்னை ராஜா அண்ணா மலைபுரம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஓய்வூதி யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல், எம்டிஎன் எல் ஓய்வூதியர்களுக்கு 1-1-2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய மாற்றத்தை வழங்க ஒன்றிய அரசையும், டிஓடி (தொலைத் தொடர்புத் துறை) நிர்வாகத்தையும் வலியுறுத்தி கடந்த ஏழு ஆண்டுகளாக ஓய்வூதி யர் சங்கங்கள் போராடி வருகின்றன. இதன் தொடர்ச் சியாக பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு (தமிழ் மாநிலம், சென்னை தொலைபேசி) உருவாக்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 2017 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதிய ரிவிஷன், இதர பொதுத்துறைகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், தொலைத்தொடர்பு துறை ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊதிய மாற்றத்தோடு இணைக்காமல், ஓய்வூதிய மாற்றம் செய்யப்படும் என்று ஒன்றிய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சர், நிர்வாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். அதையும் நிறைவேற்ற வில்லை.
ஓய்வூதிய மாற்றம் இல்லாததால் சுமார் 3.25 லட்சம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், 2017 ஜனவரி முதல் ஓய்வூதியம் ரிவிஷன், மூன்றாவது சம்பளக் குழு பரிந்துரைப்படி ஐடிஏ அடிப்படையில் 15 விழுக்காடு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதிய மாற்றத்தை, பணியில் இருப்பவர்கள் ஊதிய மாற்றத்தோடு இணைக்காமல் அமல்படுத் தப்பட வேண்டும். 18 மாத அகவிலைப்படி நிலு வையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்க மிட்டனர். போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை, பிஎஸ்என்எல்இயு அகில இந்திய இணைச் செயலாளர் செல்லப்பா, கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆர்.ராஜசேகர், கே.கோவிந் தராஜ் (ஏஐபிடிபிஏ), ஆர்.ராஜன், பி.சார்லஸ் (எஸ்என்பிடபிள்யூஏ), பி.சந்திரசேகரன், எம்.சுப்பிரமணியன் (பிடிபிஏ-ஐ) உள்ளிட்ட பலர் பேசினர்.