tamilnadu

img

பெண்களின் எதிரி மோடி அரசு

திருவனந்தபுரம், ஜன. 6 - ஒன்றிய பாஜக அரசின் நாசகர கொள்கைகள் காரணமாக மிக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நாடு முழுவதும் உள்ள பெண்களே என்று பிருந்தா காரத் விமர்சித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத்தில் ஜனவரி 6 வெள்ளி யன்று பேரெழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டைத் துவக்கி வைத்து உரை யாற்றிய சங்கத்தின் புரவலரும், இந்தியா வின் மகத்தான பெண்ணுரிமை இயக்கப்  போராளியுமான பிருந்தா காரத் உரை யாற்றினார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உதயமாகி தனது 40ஆவது ஆண்டினை எட்டியுள்ள நிலையில் தற்போதைய மாநாடு நடைபெறுகிறது எனக் குறிப்பிட்ட பிருந்தா காரத், 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 1981 மார்ச் மாதத்தில் மாதர் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு நடை பெற்றதை நினைவுகூர்ந்தார். அந்த சமயத்தில் 15 மாநிலங்களிலிருந்து 11  லட்சம் உறுப்பினர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சென்னை மாநாட்டில் பங்கேற்றார்கள்; அந்த மாநாடு, மாதர் சங்கத்தின் வெண் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள சமத்து வம், ஜனநாயகம், பெண் விடுதலை ஆகிய முழக்கங்களை 40 ஆண்டுகால மாக உயர்த்திப்பிடித்து எண்ணற்ற போராட்டக் களங்களை சந்தித்துள்ளது என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தற்போது 25 மாநிலங்களில் ஒரு  கோடிக்கும் அதிகமான உறுப்பினர் களை கொண்டுள்ள மாபெரும் மாதர் இயக்கமாக வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் மிகப் பெரும் பெண்கள் அமைப்பான மாதர்  சங்கம் தனது ஸ்தாபகத் தலைவர் களையும் மறைந்த தியாகிகளையும் நினைவு கூர்ந்து, பெண் விடுதலைக் கான போராட்டத்தை தொடர்ந்து உறுதியோடு முன்செல்லும் எனவும் சூளுரைத்தார். இந்தியாவை கடந்த எட்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சி செய்து வரும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பெண்கள் மீதும் தொழி லாளி வர்க்கத்தின் மீதும் நாட்டின் மதச் சார்பற்ற அடித்தளங்கள் மீதும் நடத்தி வரும் கொடிய தாக்குதல்களுக்கு எதி ராக அனைத்து தரப்பு பெண்களும் அணி திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மாநாட்டில் இந்திய பெண்களின் நிலைமை குறித்து அவர் மேலும் பேசியதாவது:

இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆனால் அந்த சுதந்திரத்தின் விளைவாக எட்டப்பட்ட சாதனைகள் அனைத்தும் தற்போது கடும் அச்சுறுத்தலின் பிடியில் சிக்கி யுள்ளன. இந்திய நாட்டின் பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வர்க்கங்களிடையே அதிகரித்துள்ள கடும் ஏற்றத்தாழ்வுகளின் விளைவு களையும்;  சமூக உறவுகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே தீவிர மடைந்துள்ள சமத்துவமின்மையின் விளைவுகளையும் மிக மோசமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் கள். கடந்த 40 ஆண்டு காலத்தில் மாதர்  சங்கம் நடத்திய நீதிக்கானப் போராட்டங் கள் என்பவை, அடிப்படையில் முத லாளித்துவ எதிர்ப்பு குணம் கொண்ட வையே. இந்தியாவில் முதலாளித்துவ உறவுகள் எப்படி மேலும் மேலும் ஆணா திக்க சிந்தனைகளையும் கட்டமைப்பு நடைமுறைகளையும் வலுப்படுத்தி வந்திருக்கிறது; சமரசம் செய்துகொண்டு வந்திருப்பதை மாதர் சங்கம் தனது நீண்ட நெடிய போராட்டங்களின் ஒவ் வொரு கட்டத்திலும் உணர்ந்தும், அம் பலப்படுத்தியும் வந்துகொண்டிருக் கிறது. அத்தகைய ஆணாதிக்கக் கலாச் சாரம் மேலும் வலுப்பட்டே வருகிறது. முதலாளித்துவம் அமலாக்கிய நவீன தாராளமயக் கொள்கைகளால் மிக மோச மாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே! தற்போது மோடி அரசால் வலிந்து திணிக்கப்படும் கொள்கைகள் முற்றி லும் கார்ப்பரேட் ஆதரவு - தொழிலா ளர் விரோத கொள்கைகளே. இந்தக்  கொள்கைகளாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள்தான். இந்தக் கொள்கைகள் குறிப்பிட்ட சில கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் செல்வ வளங்களை குவிப்பதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட கொள்கை கள்; இவற்றின் விளைவாக ஏற்றத்தாழ்வு மிகத் தீவிரமடைந்துள்ளது; அது நேரடி யாக பெண்களை கடுமையாக தாக்கு கிறது. 

உதாரணத்திற்கு மோடியின் நண்பர் அதானி ஒரு நாளைக்கு 1612 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் ஒரு ஏழை, கிராமப்புற தொழிலாளி ஒரு நாளைக்கு 250 ரூபாய் கூட சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ளார். மோடி யின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை கள் வேலையின்மையை தீவிரப்படுத்தி யுள்ளது; வாழ்வாதாரங்களை சூறை யாடி அழித்துள்ளது. இதன் விளைவு, அனைத்துப் பகுதிகளிலும் பெண்களை முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இக்கொள்கை களின் விளைவாக மிகக்குறைந்த கூலி பெறக்கூடியவர்களாக பெண்கள் மேலும் மேலும் மாற்றப்பட்டு வரு கிறார்கள். அரசுத் துறைகளில் கூட தீவிர தனி யார்மயம் மற்றும் காண்ட்ராக்ட் மயம் காரணமாக பெரும் எண்ணிக்கை யில் பெண்கள் நிரந்தர வேலை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்படு கிறார்கள். பெண்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்பு என்பது கடுமையாக சுருங்கியுள்ளது.

கோவிட் காலத்தில் கிராமப்புறங் களில் 1.2 கோடி பெண்கள் தங்களது வாழ்வாதாரங்களை முற்றாக இழந்தனர். மிக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அர சின் ஆய்வின்படியே, 2022இல் நாடு  முழுவதும் வேலைசெய்யும் பெண்களின் எண்ணிக்கை 31.4சதவீதமாக அதி கரித்துள்ளது. குடும்ப நிறுவனங்களில் ஊதியமின்றி வேலை செய்யும் பெண்கள்; சுயவேலைவாய்ப்பில் ஈடு பட்டுள்ள பெண்கள் உள்பட இதில்  அடங்குவர். ஒரு நாளைக்கு வெறும்  ஒரு மணி நேரம் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்ற பெண்களை யும் சேர்த்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களிடையே கடன் வலை மிகப்பெ ரிய அளவுக்கு விரிந்து கிடப்பதையும் மாதர் சங்கம் நடத்திய நாடு தழுவிய ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.  மேற்கூறிய விபரங்கள் எல்லாம், கோடிக்கணக்கான இந்திய பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் எவ்வ ளவு மிகக்கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள் என்பதை பிரதி பலிக்கிறது. நுண் நிதி நிறுவனங்கள் மூலமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடன் வலையில் சிக்கியுள்ள பெண்கள், அந்தக் கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளது. சுய உதவிக்குழுக்கள் உட்பட பெண் களின் கடன்கள் முற்றாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்; கிராமப்புற வேலை உறுதித்திட்டம் உட்பட உழை க்கும் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலும் பல்வேறு இடங்களில் மேற் கொள்ளப்படும் பாலியல் வன்கொடு மைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற முழக்கத்தோடு மாதர் சங்கம் நாடு முழுவதும் களத்தில் நிற்கிறது. இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.